முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல் தொடர் ஒத்திவைப்பு: பி.சி.சி.ஐ-க்கு ரூ.2,000 கோடி இழப்பு

புதன்கிழமை, 5 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : ஐ.பி.எல் தொடர் பாதியிலேயே நிறதப்பட்டு ஒத்திவைக்கப்பட்டதால் பி.சி.சி.ஐ-க்கு ரூ.2,000 கோடி வரை வருமானம் இழப்பு  ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று பரவல் ஐ.பி.எல் தொடரை திட்டமிட்டபடி நடத்துவதில் நடைமுறை சிக்கலை உருவாக்கியது. அதனால் எஞ்சியுள்ள லீக் போட்டிகள் அனைத்தையும் மும்பை மைதானத்திற்கு மாற்ற பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், ஹைதராபாத் வீரர் சஹாவுக்கும், டெல்லியைச் சேர்ந்த அமித் மிஸ்ராவுக்கும் வைரஸ் தொற்று உறுதியானது. 

போட்டி ஒத்திவைப்பு

பயோ பபுளில் இருந்த வீரர்களுக்கு அடுத்தடுத்து தொற்று உறுதியானதால் ஐ.பி.எல் தொடரை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் எழுந்தது. தொடர் முழுவதும் நடைபெறுமா? என்ற சந்தேகம் படர்ந்த சூழலில் ஐ.பி.எல் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி நடப்பு சீசனை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக பி.சி.சி.ஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார். தேதி எதுவும் குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் லீக் போட்டிகள் அனைத்தும் நடைபெறுமா? அல்லது வேறு ஏதேனும் உக்தி கையாளப்படுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. 

ரூ.2 ஆயிரம் கோடி...

கொரோனா காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐ.பி.எல் தொடரால் பி.சி.சி.ஐ-க்கு 2,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒளிபரப்பு மற்றும் ஸ்பான்சர்ஷிப் முதலியவற்றில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.  “பாதியிலேயே தொடர் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதால் 2000 முதல் 2500 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. சரியாக சொல்ல வேண்டுமென்றால் 2200 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும்” என பி.சி.சி.ஐ வட்டாரத்தை சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். 

ரூ.1,690 கோடி வரை...

52 நாட்களில் 60 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் நடப்பு ஐ.பி.எல் சீசன் வெறும் 24 நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. அதிலும் 29 போட்டிகள் தான் நடந்து முடிந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. உதாரணமாக ஸ்டார் நெட்வொர்க்குடனான மேற்கொள்ளப்பட்டுள்ள 5 ஆண்டு ஒளிபரப்பு ஒப்பந்த்தின் மூலம் 16347 கோடி ரூபாய். ஆண்டுக்கு 3269.4 கோடி ரூபாய். ஒரு சீசனில் 60 போட்டிகளும் நடந்தால் ஒரு போட்டிக்கு 54.5 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். தற்போது அதில் இழப்பு ஏற்பட்டுள்ளது. 29 போட்டிகள் மூலம் 1580 கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கும். மீதமுள்ள போட்டிகள் நடத்தப்படாமல் போனால் 1690 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும். 

ஊதியத்தில் 50 சதவிகிதம்...

இதே போல டைட்டில் ஸ்பான்சர் தொடங்கி அனைத்திலும் இழப்பு தான். மறுபக்கம் வீரர்களின் ஊதியத்திலும் சிக்கல்கள் ஏற்படலாம் என தெரிகிறது. வீரர்கள் தாமாக தொடரிலிருந்து விலகினால் மட்டுமே அவர்களது பங்களிப்புக்கு ஏற்ற படி ஊதியம் கொடுக்கப்படும். அதனால் ஒவ்வொரு அணிகளும் தங்கள் வீரர்களுக்கு ஊதியத்தில் 50 சதவிகிதம் கொடுக்க வேண்டி உள்ளது. இப்படி பல பாதிப்புகளை ஐ.பி.எல் நிர்வாகம் எதிக்கொள்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து