முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் மத்திய அமைச்சர் அஜித்சிங் மறைவு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்முன்னாள் மத்திய அமைச்சர் அஜித்சிங் மறைவு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

வியாழக்கிழமை, 6 மே 2021      இந்தியா
Image Unavailable

கொரோனா வைரசால் மரணம் அடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அஜித்சிங் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

ராஷ்டிரிய லோக் தள கட்சியின் தலைவராக இருந்தவர் அஜித் சிங் (வயது 86).  முன்னாள் விமான போக்குவரத்து துறை அமைச்சராகவும் இருந்த அவர் பாக்பத் தொகுதியில் 7 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமை கொண்டவர்.  கடந்த 1986-ம் ஆண்டு முதன்முறையாக பாராளுமன்ற மேலவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். 

இவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 20-ம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.  இதற்காக அவர் குர்காவன் நகர மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை இரவில் அவரது நிலைமை மோசமடைந்து உள்ளது. இதனை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.  இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து உள்ளார்.  அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் ராஷ்டிரிய லோக் தள கட்சியின் தலைவரான சவுத்ரி அஜித் சிங் மறைவு செய்தியறிந்து வருத்தமடைந்தேன் என தெரிவித்து உள்ளார்.

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தியில், விவசாயிகள் நலன்களுக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டவர்.  மத்தியில் பல்வேறு துறைகளின் பொறுப்புகளை திறமையுடன் பகிர்ந்து அளித்தவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து