முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன

வியாழக்கிழமை, 6 மே 2021      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,  தமிழக அரசு அறிவித்த கூடுதல் கட்டுப்பாடுகள் தற்போது, அமலுக்கு வந்தது. 

கடந்த மாதம் 20-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு தினமும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அனைத்து கடைகளையும் இரவு 9 மணிக்குள் மூடிவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு பிறகு அவசர தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறி வெளியில் யாராவது வாகனங்களில் வந்தால் அந்த வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் தமிழகத்தில் நேற்று  முதல் புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு கடந்த செவ்வாயன்று இரவு வெளியிடப்பட்டது.  அதன்படி நேற்று காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மளிகை, காய்கறி கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அறிவித்த கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையில்  பகல் 12 மணி முதல் உணவகங்கள், மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மற்ற அனைத்து கடைகளையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் நேற்று ஜவுளிக்கடைகள், பாத்திரக்கடைகள், எலக்ட்ரானிக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஓட்டல்களில் பார்சல்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து உணவகங்கள், பேக்கரிகளில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் பகல் 12 மணி முதல் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரையிலும் பார்சல்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து