முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊரடங்கால் பெங்களூரில் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்

திங்கட்கிழமை, 10 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

பெங்களூரு : பெங்களூருவில் கொரோனா ஊரடங்கு காரணமாக குற்ற சம்பவங்கள் 70 சதவீதம் குறைந்திருப்பதாக தெரிவித்துள்ள போலீசார், அதே நேரத்தில் சைபர் குற்றங்கள் தொடா்ந்து அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளனர். 

பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதி வேகமாக உயர்ந்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பெங்களூருவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பெங்களூருவில் குற்ற சம்பவங்கள் நடைபெறுவது குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.  தற்போது ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் குற்றங்கள் நடைபெறுவது குறைந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

அதே நேரத்தில் தகவல் தொழில் நுட்ப நகரான பெங்களூருவில் கொரோனா ஊரடங்கு காலத்திலும் சைபர் கிரைம் குற்றங்கள் மட்டும் குறையாமல் அதிகரித்து வருவதாகவும் போலீசாா் கூறியுள்ளனர். ஆக்சிஜன் சிலிண்டரை குறைந்த விலைக்கு தருவதாக கூறி பெண் போலீசிடமே ரூ.9 ஆயிரம் பெற்று சைபா் கொள்ளையர்கள் மோசடி செய்திருந்தனர்.

இதுபோன்று, சைபர் குற்றங்கள் மட்டும் அதிகரித்து வருவதாகவும், இதற்காக மக்கள் உஷாராக இருக்க வேண்டியது அவசியம் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து