முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப் காங்கிரஸ் விவகாரம்: நாளை சோனியாவை சந்திக்கிறார் : முதல்வர் அமரீந்தர்சிங்

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

சண்டிகர் : பஞ்சாப்பில் நிகழும் காங்கிரஸ் விவகாரம் தொடர்பாக முதல்வர் அமிரீந்தர்சிங் நாளை 22-ம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவை சந்தித்து பேசுகிறார்.

பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர்சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வர் அமரீந்தர் சிங்குக்கு எதிராக முன்னாள் கிரிக்கெட் வீரரும் முன்னாள் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து பகிரங்கமாக போர்க்கொடி துாக்கியுள்ளார். சித்துவுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சிலர் செயல்பட்டு வருகின்றனர்.

கோஷ்டி பூசலால் கட்சி உடைவதை தவிர்க்க தன் அதிருப்தியாளர்களுடன் முதல்வர் அமரீந்தர் சிங் ரகசிய பேச்சு நடத்தி வருகிறார். இங்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நாளை 22-ம் தேதி முதல்வர் அமரீந்தர் சிங் டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து