முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆனந்தம் விளையாடும் வீடு

செவ்வாய்க்கிழமை, 22 ஜூன் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் முன்னணி பாத்திரங்களில் நடிக்க நந்தா பெரியசாமி இயக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு”  படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு  தற்போது திண்டுக்கல் மாநகரில் துவங்கி, தீவிரமாக நடந்து வருகிறது. 40 க்கும் மேற்பட்ட பிரபல நட்சத்திர கூட்டத்துடன், குடும்ப சித்திரமாக உருவாகி வரும் இப்படத்தை ‘மிக மிக அவசரம்’, ‘மாயாண்டி குடும்பத்தார்’ படங்களின்  ஒளிப்பதிவாளர் பொர்ரா பாலபரணி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

குடும்ப படங்களை தனித்துவமான ஒளியமைப்புடன், வடிவமைப்பதில் புகழ்பெற்ற அவர் இப்படம் அனைவர் நெஞ்சங்களையும் ஈர்க்கும் படைப்பாக இருக்கும என்று பாராட்டியுள்ளார். படம் குறித்து ஒளிப்பதிவாளர் பொர்ரா பாலபரணி கூறியதாவது...  மிக மிக சந்தோஷமான தருணம் என்னெவெனில் நான் வளர்ந்த இடத்தில் நான் புழங்கிய தெருக்களில் படப்பிடிப்பு நடத்துவதுதான். திண்டுக்கல் எனது சொந்த ஊர் இப்போது “ஆனந்தம் விளையாடும் வீடு” படப்பிடிப்பு முழுதும் அங்கே தான் திட்டமிட்டு நடத்திவருகிறோம். 

இதற்கு முன் மாயாண்டி குடும்பத்தார் படத்தின் சில பகுதிகள் மட்டும் இங்கு நடத்தினோம். ஆனால் இப்போது முழுப்படமும் இங்கே படப்பிடிப்பு நடத்துகிறோம். இது வரையிலும் தமிழ், தெலுங்கு கன்னடம்,மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளிலும் பணியாற்றியுள்ளேன். “ஆனந்தம் விளையாடும் வீடு” அதில் தனித்துவமான படமாக இருக்கும்.  

இப்படத்தினை ஶ்ரீ வாரி ஃபிலிம் சார்பில் தயாரிப்பாளர் P.ரங்கநாதன் தயாரிக்கிறார். பாடல்களை சினேகன் எழுத சித்து குமார் இசையமைக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து