முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலீஸ் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் - கனிமொழி எம்.பி.

புதன்கிழமை, 23 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சேலம் மாவட்டத்தில் வாகன சோதனையின்போது காவலர் தாக்கியதில் முருகேசன் என்பவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தாக்குதல் நடத்திய எஸ்.ஐ. கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக தி.மு.க. எம்.பி.,கனிமொழி டுவிட்டர் பதிவில், 

சாமான்ய மக்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும். மே 7 க்கு முன்பாக இருந்த மனோ நிலையில் இருந்து மாற வேண்டும். நடப்பது தி.மு.க.வின் மக்களுக்கான ஆட்சி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து