முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 முறை தேசிய விருது பெற்ற நடிகை சுரேகா சிக்ரி மரணம்

வெள்ளிக்கிழமை, 16 ஜூலை 2021      சினிமா
Image Unavailable

Source: provided

மும்பை : மூன்று முறை தேசிய விருது பெற்ற பிரபல நடிகை சுரேகா சிக்ரி மாரடைப்பால் காலமானார்; அவருக்கு வயது 76.

பாலிவுட் படங்கள், இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் சுரேகா சிக்ரி. உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேகா நேற்று காலை 8.30 மணிக்கு மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 76.

முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மூளை பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்கும் முன்பு 2018-ம் ஆண்டு டி.வி. நிகழ்ச்சியின் ஷூட்டிங்கில் இருந்த போது கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு அவருக்கு மூளை பக்கவாதம் ஏற்பட்டது.

சுரேகா சிக்ரி, கடந்த 1978-ம் ஆண்டு வெளியான அரசியல் திரைப்படமான  கிசா குர்சி கா என்ற் படத்தில் அறிமுகமானார். அத்துடன், ஏராளமான இந்தி மற்றும் மலையாள படங்களிளும், தொலைக்காட்சித் தொடர்களிலும் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

1988-ம் ஆண்டு வெளியான தமஸ், மற்றும் 1995-ம் ஆண்டு வெளியான மம்மூ என்ற திரைப்படங்களில் அவரது காதபாத்திரத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. 2008-ம் ஆண்டில் பாலிகா வாது என்ற நிகழ்ச்சியில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்ததற்கான சிறந்த நடிகைக்கான இந்தியன் டெலி விருது பெற்றார்.

இந்தி நாடக அரங்குகளில் அவரது பங்களிப்புக்காக 1989-ல் சங்கீத நாடக அகாடமி விருது வென்றார். மேலும், 64 வது பிலிம்பேர் விருதுகளில் சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதிற்கு சுரேகா சிக்ரி பரிந்துரைக்கப்பட்டார்.  சுரேகா சிக்ரி மறைவிற்கு திரைப்பட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து