முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - இங்கி. டெஸ்ட் தொடர் சமனாக வாய்ப்பு: பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி கணிப்பு

வெள்ளிக்கிழமை, 16 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை: இந்தியா - இங்கி. டெஸ்ட் தொடர் சமனாக வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ள பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி, ரிஷப் பந்த்துக்கு கொரோனா பாசிட்டிவ் குறித்து விவகாரத்தில், எப்போதும் வீரர்கள் முகக்கவசம் அணிந்து கொண்டே இருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கையாக... 

இது தொடர்பாக அவரிடம் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த கங்குலியிடம், ‘ரிஷப் பந்த் கொரோனா பாசிட்டிவ் உறுதியாகியுள்ளது, இந்திய அணி அங்கு லீவு சுற்றுலா மேற்கொண்ட போது வீரர்கள் மாஸ்க் அணியாமல் சுற்றித்திரிந்தனரே, அவர்கள் இன்னும் கூட எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?’ என்று கேட்கப்பட்டது.

விடுப்பில் வீரர்கள்... 

இதற்குப் பதில் அளித்த கங்குலி, “இங்கிலாந்தில் நடந்த யூரோ சாம்பியன்ஷிப் கால்பந்து, விம்பிள்டன் என்று அனைத்தையும் பார்த்தோம். விதிகள் மாறியிருந்தன, ரசிகர்கள் இந்தப் போட்டிகளுக்கு வர அனுமதிக்கப்பட்டனர். மேலும் இந்திய அணி வீரர்கள் விடுப்பில் உள்ளனர், எப்போதும் மாஸ்க் அணிந்து கொண்டேயிருப்பது சாத்தியமில்ல்லை.

தலையிடுவதில்லை... 

ரிஷப் பந்த் கொரோனா பாசிட்டிவ் உறுதி கவலையளிக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த கங்குலி, கவலையில்லை, என்று தெரிவித்ததுடன் பாதிக்கப்பட்டவர்கள் நலமடைவார்கள், என்றார். மேலும் அந்தப் பேட்டியில், ஷூப்மன் கில் காயமடைந்திருக்கிறார், யார் தொடக்க வீரர் என்று கேட்ட போது, “இந்த விவகாரங்களிலெல்லாம் நான் தலையிடுவதில்லை. அணி நிர்வாகம் இதை முடிவு செய்யும் என்றார்.

சமன் செய்ய வாய்ப்பு...

மேலும் இங்கிலாந்து தொடர் பற்றி அவர் தெரிவிக்கையில், “எதையும் கணிக்க முடியாது. இந்தியா நிச்சயம் நல்ல கிரிக்கெட்டை ஆடும். ஒரேயொரு ஆட்டத்தின் முடிவை வைத்து சரியான அணியா தவறான அணியா என்பதை முடிவு செய்ய முடியாது. இது ஒரு நீண்ட தொடர் இரு அணிகளுக்குமே சமன் செய்ய வாய்ப்பிருக்கிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து