முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனிமையில் ரிஷப் - விருத்திமான் சகா: தனது விருப்பத்தை சூசகமாக தெரிவித்த தினேஷ் கார்த்திக்!

வெள்ளிக்கிழமை, 16 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்குத் தான் விக்கெட் கீப்பிங் செய்ய தயார் என்பதை தனது ட்விட்டர் பதிவி சூசகமாக தெரிவித்துள்ளார் தினேஷ் கார்த்திக்.

இருவர் பாதிப்பு...

இந்திய அணியின் இரண்டு ஸ்பெஷலிஸ்ட் விக்கெட் கீப்பர்களில் ரிஷப் பந்த் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார், விருத்திமான் சகா, சுய தனிமையில் இருக்கிறார், இருவரும் ஆட முடியாமல் போனால் தான் விக்கெட் கீப்பிங் செய்ய தயார் என்பதை தனது ட்விட்டர் பதிவி சூசகமாக தெரிவித்துள்ளார் தினேஷ் கார்த்திக்.

மேலும் 3 பேர்...

ரிஷப் பந்த் கொரோனா பாசிட்டிவ் ஆனதால் உறவினர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். உதவியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவருடன் இருந்த விருத்திமான் சகாவும், பவுலிங் கோச் பாரத் அருணும் விடுதி அறையில் தனிமையில் உள்ளனர்.

கார்த்திக் சூசகம்...

இந்நிலையில் இரண்டு விக்கெட் கீப்பர்களும் ஆட முடியாவிட்டால், இந்திய அணிக்கு இருக்கும் ஒரே தெரிவு கே.எல்.ராகுல்தான். ஆனால் வர்ணனைக்காக இங்கிலாந்து வந்துள்ள தமிழகத்தை சேர்ந்த இந்திய விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தான் விக்கெட் கீப்பிங் செய்யத் தயார் என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது ரிஷப் பந்த், சஹா ஆட முடியாமல் போனால் தான் தயார் என்பதை இப்படி சூசகமாகத் தெரிவித்துள்ளார் தினேஷ் கார்த்திக், அதாவது 

அணிக்குள் நுழைய...

ஜஸ்ட் சேயிங் என்ற கேப்ஷனுடன் தன் கிட் பேக்கை வெளியிட்டுள்ள  தினேஷ் கார்த்திக்., இரண்டு வாரங்களுக்கு முன்பாகக் கூட, “ஐ.பி.எல் எப்படிப் போகிறது என்பதைப் பொறுத்தது. கொல்கத்தா அணிக்காக சிறப்பாக ஆட வேண்டும். அது இந்திய அணிக்குள் நான் நுழைய உதவிபுரியுமா என்று பார்க்க வேண்டும்.

நன்றாக ஆடு...

இந்தியாவுக்காக ஆடுவது எப்போதும் கடினமே. வெளியில் இருக்கும்போதுதான் இந்திய அணிக்கு ஆடுவதன் அருமையும் பெருமையும் புரிகிறது, கடினப்பாடும் புரிகிறது. நான் சிலகாலமாக நன்றாக ஆடுகிறேன் என்பதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன என்று தெரிவித்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து