முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

' ஒலிம்பிக் ' பாய்மர படகு போட்டி: பயிற்சியை தொடங்கிய 4 தமிழர்கள்

சனிக்கிழமை, 17 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

டோக்கியோ: டோக்கியோ சென்றைடைந்த இந்திய ஒலிம்பிக் குழுவில் பாய்மர படகு போட்டியில் பங்கு பெறும் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் நேற்று தங்களது பயிற்சியை தொடங்கியுள்ளனர்.

டோக்கியோ சென்றனர்...

விளையாட்டு உலகின் உட்சபட்ச போட்டியான ஒலிம்பிக் தொடர் வரும் 23-ம் தேதி டோக்கியோவில் களைகட்டவுள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் தனி விமானம் மூலம் டோக்கியோ சென்றடைந்தனர். ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 127 வீரர்கள் களமிறங்குகின்றனர். இதில் தமிழகத்திலிருந்து 11 வீரர்கள் தேர்வாகி சாதனை நிகழ்த்தியுள்ளனர். இந்தியா சார்பில் பாய்மர படகுப்போட்டியில் களமிறங்கும் நான்கு வீரர்களும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் சிறப்பாகும்.

பாய்மர படகு...

சென்னையை சேர்ந்த நேத்ரா பாய்மர படகு போட்டியின்  லேசர் ரேடியல் பிரிவிலும், வருண் மற்றும் கணபதி ஆகியோர் 49er  பிரிவிலும், விஷ்ணு சரவணன் லேசர் STD பிரிவிலும் பங்கேற்கவுள்ளனர்.

பயிற்சியில்...

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக டோக்கியோ சென்ற தமிழக வீரர், வீராங்கனைகள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். டோக்கியோ சிட்டியில் உள்ள கடலில் இந்திய கொடியுடன் கூடிய பாய்மர படகில் தமிழக வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து