முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.எஸ். டோனி - சி.எஸ்.கே.வுக்காக இந்தாண்டு ஐ.பி.எல் கோப்பையை வெல்ல வேண்டும்: சுரேஷ் ரெய்னா

செவ்வாய்க்கிழமை, 20 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை: எம்.எஸ். டோனி - சி.எஸ்.கே அணிக்காக இந்தாண்டு ஐ.பி.எல் கோப்பையை வெல்ல வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

200 போட்டிகள்... 

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசிய அவர் "டோனியும் நானும் இந்தியா மற்றும் சி.எஸ்.கே அணிக்காக நிறையப் போட்டிகளில் விளையாடி இருக்கிறோம். சி.எஸ்.கேவுக்காக நானும் அவரும் ஏறக்குறைய 200 போட்டிகளுக்கு மேல் விளையாடி இருக்கிறோம். 

மூத்த சகோதரர்...

நான் அவர் மீது நிறைய மரியாதை வைத்திருக்கிறேன். அவர் எனக்கு மூத்த சகோதரரை போன்றவர். அவரிடம் இருந்து நிறைய கற்று இருக்கிறேன். அவரும் என் மீது அன்பு வைத்திருக்கிறார்" என்றார்.

குறைந்ததே இல்லை...

மேலும் பேசிய சுரேஷ் ரெய்னா "இருவரும் இணைந்தே நிறையப் போட்டிகளை வென்று இருக்கிறோம், தோற்று இருக்கிறோம். ஆனால் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் மரியாதை குறைந்ததே இல்லை. அதனால் இந்தாண்டு ஐ.பி.எல் கோப்பையை சி.எஸ்.கேவுக்காக வென்று தர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமாக இருக்கிறது" என்றார் சுரேஷ் ரெய்னா.

3 தடவை சாம்பியன்...

கேப்டன் டோனி 2010, 2011, 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் கோப்பையை வென்றுள்ளார். அவர் தலைமையிலான சி.எஸ்.கே அணி தொடர்ந்து பயணித்து கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து