முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நூற்றாண்டு விழா: திலகருக்கு பிரதமர் மோடி புகழாரம்

வெள்ளிக்கிழமை, 23 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: பாலகங்காதர திலகரின் நூற்றாண்டு விழாவையொட்டி அவருக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார். 

சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதர திலகரின் நூற்றாண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரதமர் மோடி அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நாட்டிற்கு செய்த பங்களிப்புகளை நினைவு கூர்ந்தார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

பாலகங்காதர திலகரின் கல்வி மற்றும் பெண்கள் அதிகாரம் குறித்த கருத்துக்கள் தொடர்ந்து பலரை ஊக்குவித்து வந்தது. அவர் நடத்திய நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு பல்வேறு பணிகளை செய்துள்ளார். அவரது பிறந்தநாளையொட்டி அவரை நான் வணங்குகிறேன். தற்போதைய சூழ்நிலைகளில் அவருடைய எண்ணங்களும், கொள்கைகளும் மிகவும் பொருத்தமானவை. பொருளாதார ரீதியாக வளமான இந்தியா மற்றும் சமூக ரீதியாக முற்போக்கான பாரதத்தை உருவாக்க அவர் முயன்றார்.  இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து