முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2021 ஐ.பி.எல் தொடர்: டோனி தலைமையிலான சி.எஸ்.கே அணி ஆகஸ்ட் 20-ல் துபாய் பயணம்

வெள்ளிக்கிழமை, 23 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சென்னை: ஐ.பி.எல் 2021 சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்கள் துபாயில் நடைபெறும் என ஐ.பி.எல் நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகஸ்ட் 20 வாக்கில் துபாய் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

31 ஆட்டங்கள்...

வரும் செப்டம்பர் 19 தொடங்கி அக்டோபர் 15 வரை ஐ.பி.எல் 2021 சீசனில் எஞ்சியுள்ள 31 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதையடுத்து அக்டோபர் முதல் நவம்பர் வரையில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரும் அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

துபாய் செல்கிறது...

இந்நிலையில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகஸ்ட் 20 வாக்கில் துபாய் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து