முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் சிலர் போலி சமூக நீதி பேசுகின்றனர்: பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேட்டி

செவ்வாய்க்கிழமை, 27 ஜூலை 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் சிலர் போலி சமூக நீதி பேசுவதாக கூறியுள்ள தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, இணை அமைச்சர் எல்.முருகனுக்கு பிரதிநிதித்துவம் கொடுத்து அவர் சமூகத்தை பா.ஜ.க. முன்னேற்றி இருப்பதாகவும், திமுக.,வில் இதுபோல் இல்லாமல் சிலரை வளர விடுவதில்லை எனவும் கூறியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் அப்துல் கலாம் நினைவு தினத்தையொட்டி அவரது படத்திற்கு பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

அப்துல்கலாம் தமிழகத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்தவர்; விஞ்ஞானத்திற்கு பலம் சேர்த்தவர். அ.தி.மு.க - பா.ஜ., கூட்டணியில் இருக்கிறது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு அரசியல் காழ்ப்புணர்ச்சி. இதை நீதிமன்றத்தில் எதிர் கொள்வார்கள். மீனவர் சட்ட மசோதாவில் குறைகள் இருந்தால் பா.ஜ., கவனத்தில் கொள்ளும். மீனவர்கள் கோரிக்கைக்காக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

தமிழக கவர்னர் ஒரு தலைப்பட்சமாக செயல்படவில்லை. தமிழக காங்கிரஸ் அரசியல் ரீதியாக இதுபோல் குற்றச்சாட்டுகளை வைக்கிறது. தமிழகத்தில் போலி சமூக நீதி பேசுகின்றனர். இணை அமைச்சர் எல்.முருகனுக்கு பிரதிநிதித்துவம் கொடுத்து அவர் சமூகத்தை முன்னேற்றி இருக்கிறோம். ஆனால் தி.மு.க.,வில் இதுபோல் இல்லை. சிலரை வளர விடுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து