எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : நாடு முழுமையும் நதிகள் இணைக்கப்படுமா என்பன உள்ளிட்ட வைகோ எம்.பி.யின் கேள்விகளுக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர செகாவத் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து ம.தி.மு.க. தலைமை நிலையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:
நாடாளுமன்றத்தில் எம்.பி. வைகோ, மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் 4 கேள்விகளைக் கேட்டிருந்தார்.
1. நாடு முழுமையும் நதிகளை இணைப்பதற்கு, அரசு ஏதேனும் திட்டம் வகுத்து இருக்கின்றதா?
2. அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்கள் தேவை; புதிய திட்டமாக இருந்தால், இதற்கு முன்பு செயல்படுத்திய திட்டங்களில் இருந்து, எந்த அளவிற்குத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த விவரங்கள் தேவை.
3. காவிரி - குண்டாறு ஆகிய நதிகளை இணைப்பது குறித்து, தமிழக அரசிடம் இருந்து ஏதேனும் திட்ட வரைவு வந்துள்ளதா? அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்கள் தருக;
4. தென்னிந்திய நதிகளை இணைப்பதற்கான திட்டங்கள்; குறிப்பாக கோதாவரி- கிருஷ்ணா- காவிரி இணைப்பு; மற்றும் அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான கால வரையறை குறித்த விவரங்கள் தருக.
இதுகுறித்து 26.07.2021 அன்று நாடாளுமன்றத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர செகாவத் அளித்த விளக்கம் வருமாறு:
கேள்வி எண் 1,2க்கு விளக்கம்:
1980ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மத்திய நீர்ப்பாசனத் துறை, நீர்வளம் மிகுதியான ஆற்றுப்படுகைகளில் இருந்து நீர்வளம் குறைவான ஆறுகளுக்கு நீரைப் பகிர்வதன் மூலம் நீர் வளங்களை மேம்படுத்துவது குறித்து, தேசிய முன்னோக்குத் திட்டம் (National Perspective plan-NPP) ஒன்றை வரைந்தது. அந்தத் திட்டத்தின் கீழ், தேசிய நீர்வள முகமை (National Water Development Agency NWDA), 30 இணைப்புத் திட்டங்களை அடையாளம் கண்டது.
அவற்றுள் 16 திட்டங்கள் தென்னிந்தியாவிலும், 14 திட்டங்கள் இமயமலை ஆறுகளின் பாசனப் பகுதிகளிலும் செயல்படுத்துவற்கான ஆய்வு அறிக்கை வரையப்பட்டது. அதுகுறித்த விவரங்கள் இணைப்பில் தரப்பட்டுள்ளன.
கேள்வி 3-க்கு விளக்கம்:
வெள்ளப் பெருக்கின்போது காவிரி நீரை, தெற்கு வெள்ளாறு வரை கொண்டு போவதற்கான திட்டத்திற்குக் கொள்கை அளவில் ஏற்பு அளிப்பதுடன், நிதி உதவியும் கோரி, தமிழக அரசிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது.
தேசிய முன்னோக்குத் திட்டத்தின்படி, காவிரி (கட்டளை)- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டம் என்பது, மகாநதி- கோதாவரி- கிருஷ்ணா- பெண்ணைஆறு- காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும்.
இந்தத் திட்டம் குறித்து, தேசிய நீர்வள முகமையின் விரிவான அறிக்கை, இந்தத் திட்டத்தில் தொடர்புடைய மாநிலங்களுக்கு, 2020 ஆகஸ்ட் மாதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், தமிழ்நாட்டில், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில், 4.48 லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும். மேலும் 2050ஆம் ஆண்டு வாக்கில் கூடுதலாக 28 லட்சம் மக்களுக்கு மாதந்தோறும் 79 எம்சிஎம் நீர் வழங்கிட வகை செய்யும்; தொழிற்சாலைகளின் கூடுதல் தேவைக்காக, 139 எம்.சி.எம். நீர் கிடைக்கும்.
கேள்வி 4-க்கு விளக்கம்:
தென்னிந்திய நதிகள் இணைப்பிற்கான 16 திட்டங்களுள் 12 திட்டங்கள், தெற்குப் பகுதிக்கானவை:
1. மகாநதி (மணிபத்ரா) - கோதாவரி (தௌலேஸ்வரம்) இணைப்பு
2. கோதாவரி (போலாவரம்) - கிருஷ்ணா (விஜயவாடா) ஆந்திர அரசு செயல்படுத்தி விட்டது.
3. கோதாவரி (ஈஞ்சம்பள்ளி) - கிருஷ்ணா (புலிசிந்தலா) இணைப்பு
4. கோதாவரி (ஈஞ்சம்பள்ளி) - கிருஷ்ணா (நாகார்ஜூனசாகர்) இணைப்பு
5. கிருஷ்ணா (நாகார்ஜூனசாகர்) - பெண்ணை ஆறு (சோமசீலா) இணைப்பு
6. கிருஷ்ணா ( ஸ்ரீ சைலம்) - பெண்ணை ஆறு இணைப்பு
7. கிருஷ்ணா (அலமாட்டி) - பெண்ணை ஆறு இணைப்பு
8. பெண்ணை ஆறு (சோமசீலா) - காவிரி (கல்லணை) இணைப்பு
9. காவிரி (கட்டளை) - வைகை - குண்டாறு இணைப்பு
10. பம்பா-அச்சன்கோவில்-வைப்பாறு இணைப்பு
11. நேத்ராவதி-ஹேமாவதி இணைப்பு
12. பெட்டி - வர்தா இணைப்பு
மேற்கண்ட திட்டங்களுள், ஒன்று முதல் பத்து வரையிலான திட்டங்களுக்கு, முதல் கட்ட ஆய்வறிக்கை நிறைவு பெற்று, தொடர்புடைய மாநிலங்களுக்குத் தரப்பட்டு இருக்கின்றது.
மணிபத்ரா- ஈஞ்சம்பள்ளி அணைகள் இணைப்பில், பெரும்பகுதி நிலம் நீருக்குள் மூழ்குவதால், எஞ்சிய நீரைக் கோதாவரியின் துணை ஆறான இந்திராவதி படுகைக்குத் திருப்பி விடுவது குறித்து ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை; மாற்றுத் திட்டம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, முன்னோக்கு அறிக்கை, தொடர்புடைய மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.
இந்தத் திட்டத்தில் இணைக்கப்பட உள்ள ஆறுகளின் பட்டியல், இணைப்பில் தரப்பட்டு உள்ளது.
நதிகள் இணைப்பிற்கான சிறப்புக்குழு ( The special Committee for Interlinking Rivers -ILR), தொடர்புடைய மாநிலங்களின் கருத்துகளை ஆராய்ந்தபிறகு, அனைவருக்கும் இணக்கமான முறையில் திட்டத்தின் குறிக்கோளை நிறைவேற்றுவதற்கான பணிகளை விரைவுபடுத்தும்.
நதிகளை இணைக்கும் திட்டத்தை நிறைவேற்ற பல்வேறு படிக்கட்டுகள் உள்ளன. இணக்கத் தீர்வை ஏற்படுத்துவதற்கான கருத்துப் பரிமாற்றங்கள், திட்ட முன் வரைவுகள், தொடர்புடைய முகமைகளிடம் இருந்து இசைவு பெறுதல், சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் துறை அமைச்சகத்தின் ஏற்பு, பருவநிலை மாற்றங்கள் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் ஏற்பு வழங்குதல், நீர்ப்பாசனம் தொடர்பான அறிஞர்களின் கருத்துகளைப் பெறுதல், வெள்ளத் தடுப்பு குறித்த நடவடிக்கைகள், நீர்வளத்துறை அமைச்சகத்தின் ஒப்புதல், அத்துடன் திட்டத்தைச் செயல்படுத்துவற்கான நிதிமுதல் பெறுவதற்கான ஏற்பாடுகள், இதுபோன்ற அனைத்துப் பணிகளும் நிறைவு பெற வேண்டும்.
எனவே, இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான கால வரையறை மாறுபட்டுக்கொண்டே இருக்கும். தொடர்புடைய அனைத்து மாநிலங்களுக்கு இடையிலும் ஒருமித்த கருத்து ஏற்பட்ட பிறகே, செயல்படுத்த முடியும்.
இவ்வாறு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளதாக ம.தி.மு.க. தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.