முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன வெளியுறவுத் துறை அமைச்சரைச் சந்தித்த தலிபான்கள்

புதன்கிழமை, 28 ஜூலை 2021      உலகம்
Image Unavailable

9 பேர் அடங்கிய தலிபான்கள் குழு நேற்று (புதன்கிழமை) சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயைச் சந்தித்தது.

இதுகுறித்து தலிபான்கள் செய்தித் தொடர்பாளர் முகமத் நயீம் கூறும்போது, ஆப்கானிஸ்தானின் தற்போதையை நிலை குறித்தும், அமைதி, அரசியல், பொருளாதாரம் ஆகியவை குறித்தும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்டன. இரு நாட்டு உறவு குறித்தும் பேசப்பட்டது என்று தெரிவித்தார்.

ஆப்கன் நிலத்தை சீனாவுக்கு எதிராக யாரும் பயன்படுத்தக் கூடாது என்று தலிபான்களிடம் அமைச்சர் வாங் யீ வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலிபான்களுடன் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி தீவிரப் பேச்சுவார்த்தை நடத்த முயன்றுவரும் நிலையில், சீன வெளியுறவுத் துறை அமைச்சரை தலிபான்கள் சந்தித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா, நேட்டோ படைகள் வெளியேற்றத்துக்குப் பிறகு, இராக், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய எல்லையோரப் பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படை வீரர்களைத் திரும்பப் பெறும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதத்துக்குள் அனைத்து அமெரிக்க வீரர்களும் நாடு திரும்புவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து