முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக கட்டிடம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சனிக்கிழமை, 31 ஜூலை 2021      தமிழகம்
Image Unavailable

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகக் கட்டிடத்தைக் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

தமிழகத்தில்  உள்ள  38 மாவட்டங்களில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில்  முதல்முறையாக திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்குப் புதிய கட்டிடம் 3282 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடம், மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலகம், இளம் சிறார்களுக்கான காதுகேளாதோர் பயிற்சி மையம், உதவி உபகரணங்கள் வழங்கும் பிரிவு, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சாய்தளம், சிறப்புக் கழிவறை உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச் செயலாளர் லால்வேனா, மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து