முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு கங்கையில் புனித நீராட குவிந்த பக்தர்கள் கூட்டம்

திங்கட்கிழமை, 2 ஆகஸ்ட் 2021      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

வாரணாசி : உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் சமூக இடைவெளியை மறந்து கங்கையில் புனித நீராடவும், முக கவசமின்றி சாமி தரிசனமும் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.

உத்தர பிரதேசத்தில் வாரணாசி நகரில் அமைந்த கங்கை ஆற்றில் சவான் மாதத்தின் 2-வது திங்கட்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் திரளாக கூடி புனித நீராடினர்.  இதில், கொரோனா கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையான சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் காற்றில் பறக்க விடப்பட்டது. இதேபோன்று, வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாத கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் சாமி தரிசனம் செய்ய ஒன்றாக குவிந்தனர்.  அவர்கள் முக கவசமின்றி சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்றிருந்தனர்.  

சமீப காலங்களாக கொரோனாவின் 2-வது அலை தீவிரம் குறைந்துள்ளது என்றபோதிலும், மக்கள் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடில் 3-வது அலை தோன்ற கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மறந்து காலையிலேயே கங்கையில் புனித நீராடவும், சாமி தரிசனமும் செய்ய பக்தர்கள் குவிந்து இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து