எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி முதல் அரை இறுதியில் பெல்ஜியத்திற்கு எதிராக 5-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது. தனக்கு கிடைத்த பெனால்ட்டி கார்னர் வாய்ப்புகளை கோலாக மாற்றி பெல்ஜியம் இறுதிக்கு முன்னேறியுள்ளது.
முதல் அரையிறுதி...
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, உலக சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அணியான பெல்ஜியத்துடன் விளையாடியது.
ஹர்மன்பிரீத் சிங்...
போட்டியின் முதல் கால் இறுதியில் பெல்ஜியம் அணியின் லுப்பர்ட் 2வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து கோல் கணக்கை துவக்கினார். இதன்பின் இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்து, அதனை இந்திய அணியின் ஹர்மன்பிரீத் சிங் 7வது நிமிடத்தில் கோலாக்கினார்.
இந்தியா முன்னிலை...
இதனால் போட்டி 1-1 என சமநிலை பெற்றது. அடுத்த நிமிடத்தில், இந்தியாவின் அமித் ரோகிதாஸ் அடித்த பந்து, மன்தீப் சிங்கிடம் சென்றது. அதனை அவர் கோலாக்கினார். இதனால், முதல் கால் இறுதியில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
2வது கால் இறுதி...
அதன்பின் 2வது கால் இறுதி நடந்தது. இதில் போட்டியின் 19வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் அலெக்சாண்டர் ஹெண்டிரிக்ஸ் அடித்த கோலால் 2-2 என ஆட்டம் சமன்பெற்றது. 2வது கால் இறுதி முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்களுடன் சமநிலையில் இருந்தன.
தடுப்பு அரணாக...
தொடர்ந்து நடந்த போட்டியில் 33வது மற்றும் 36வது நிமிடங்களில் இந்திய அணியினர், எதிரணி பகுதிக்குள் நுழைந்து அதிரடியாக விளையாடினர். எனினும் தடுப்பு அரணாக இருந்து கோல் அடிக்க விடாமல் பெல்ஜியம் அணி தடுத்தது.
அடுத்தடுத்து கோல்...
இதன்பின் 39வது நிமிடத்தில் இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. எனினும், ஹர்மன்பிரீத் சிங் அடித்த பந்து கோலாகவில்லை. இந்நிலையில், போட்டியின் 49வது, 53வது மற்றும் 59வது நிமிடங்களில் பெல்ஜியம் அணி அடுத்தடுத்து 3 கோல்கள் அடித்தன. இதனால் போட்டி முடிவில் 5-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வெற்றி பெற்றுள்ளது.
பெனால்ட்டி கார்னர்...
இந்தப் போட்டியில் பெல்ஜியம் அடித்த 4 கோல்களும் பெனால்ட்டி கார்னர் வாய்ப்புகளே. போட்டி நேர முடிவில் பெல்ஜியம் 5-2 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே விளையாடிய இந்திய அணி போராடி தோல்வியை தழுவியது இந்திய ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.
ஹென்றிக்ஸ் அபாரம்...
பெல்ஜியத்தின் அலெக்சாண்டர் ஹென்றிக்ஸ் 19, 49, 53ம் நிமிடங்களில் 3 கோல்களை அடித்து இந்த தொடரின் ஹாட்ரிக்கை நிகழ்த்தினார், மேலும் இந்தத் தொடரில் அதிக கோல்களை அடித்தவரும் ஹென்றிக்ஸ்தான்.
வெண்கலத்திற்கு...
ஆஸ்திரேலியா-ஜெர்மனி அணிகளுக்கு இடையிலான மற்றொரு அரையிறுதியில் தோல்வியடையும் அணியுடன் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கலப்பதக்கப் போட்டியில் ஆடும்.
பிரதமர் மோடி ட்வீட்
போட்டியை தொடக்கத்திலிருந்து முழுதும் பார்த்தார் பிரதமர் மோடி. அப்போது செய்த ட்வீட்டில், இந்திய-பெல்ஜியம் ஹாக்கி அரையிறுதியை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார். பிறகு இந்திய அணி தோல்வி குறித்து ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி " வெற்றி, தோல்வி வாழ்க்கையின் ஒரு பகுதி. டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் அணி தங்களால் முடிந்ததை வழங்கியது, அது தான் முக்கியம். அடுத்த போட்டி மற்றும் அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள். எங்கள் வீரர்களை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது" என தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
-
நடத்தை விதிமீறல் புகார்: வரும் 29-ம் தேதி பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புது டெல்லி, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரில், பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் வரும் 29-ம் தேதி விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட
-
தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
25 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
காங்கிரசுக்கு ஓட்டு போடாவிட்டாலும் பரவாயில்லை: என் இறுதி ஊர்வலத்துக்கு வாருங்கள்: கார்கே உருக்கம்
25 Apr 2024பெங்களுரு, காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடாவிட்டாலும் பரவாயில்லை, எனது இறுதி ஊர்வலத்துக்காவது வாருங்கள் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்ச
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n