முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெ.ஆப்பிரிக்க - ஆஸி. வீராங்கனைகள் விலகல்: டோக்கியோ விரைந்த இந்திய கோல்ஃப் வீராங்கனை தீஷா !

செவ்வாய்க்கிழமை, 3 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

தெ.ஆப்பிரிக்க - ஆஸி. வீராங்கனைகள் விலகல் காரணமாக கிடைத்த வாய்ப்பையடுத்து இந்திய கோல்ஃப் வீராங்கனை தீஷா தாகர் டோக்கியோ சென்றுள்ளார். இன்று தொடங்கும் கோல்ஃப் போட்டியில் அவர் பங்கேற்கிறார். 

5 நாட்கள் மட்டும்... 

2020-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் டோக்கியோ நகரில் நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் முடிவடைய இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளன.  ஒலிம்பிக் கோல்ஃப் போட்டிகள் இன்று தொடங்குகின்றன.  இந்நிலையில், போட்டியில் பங்கேற்க இருந்த தென் ஆப்பிரிக்க மற்றும் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் கடைசி நேரத்தில் விலகினர்.

பங்கேற்கும் வாய்ப்பு... 

இதையடுத்து அடுத்த இடத்தில் இருந்த இந்தியாவின் தீஷா தாகர், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு அமைந்தது.  அயர்லாந்தில் மற்றொரு போட்டியில் பங்கேற்க சென்றிருந்த தீஷா தாகருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர் டோக்கியோ புறப்பட்டு சென்றார்.

அதிதீ அசோகுடன்... 

இந்தியாவின் மற்றொரு வீராங்கனையான அதிதீ அசோக்  உடன் தீஷா தற்போது இணைந்துள்ளார். அதிதீ அசோக் முதல் சுற்றில் நன்னா கோர்ஸ்ட்ஸ் மேட்சன் மற்றும் கியுலியா மோலினாரோ ஆகியோருடனும், தீக்ஷா கிம் மெட்ராக்ஸ் மற்றும் டோன்ஜே டாஃபின்ரூட் ஆகியோருடன்  விளையாடவுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து