முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கி. உணவு இடைவேளை வரை 2 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள்

புதன்கிழமை, 4 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

நாட்டிங்காம்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் டெஸ்ட் போட்டியின் உணவு இடைவேளை வரை சிராஜ், பும்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இங்கிலாந்து பேட்டிங்...

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்தியா அணி:

1.ரோகித் சர்மா 2. கேஎல் ராகுல் 3. புஜாரா 4. விராட் கோலி 5. ரஹானே 6.ரிஷப் பண்ட் 7. தாகூர் 8. ஜடேஜா 9. பும்ரா 10. முமகது சிராஜ் 11. முகமது ஷமி

இங்கிலாந்து அணி:

1.ரோரி பர்ன்ஸ் 2. டாம் சிப்லி 3.ஜாக் கிராவ்லி 4.ஜோ ரூட் (கேப்டன்) 5. பேர்ஸ்டோ 6. லாரன்ஸ் 7. ஜோஸ் பட்லர் 8. சாம் கர்ரன் 9.ஆலி ராபின்சன் 10. ஸ்டூவர்ட் பிராட் 11. ஜேம்ஸ் ஆண்டர்சன்.

அஸ்வின் - இஷாந்த்...

இங்கிலாந்து அணியில் சுழற்பந்துவீச்சாளர் ஜேக் லீச் சேர்க்கப்படவில்லை. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராக கே.எல். ராகுல் களமிறங்குகிறார். அனுபவ வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், இஷாந்த் சர்மா சேர்க்கப்படவில்லை. 

சிராஜ் அபாரம்...

தொடக்க ஆட்டக்காரர்களாக இங்கிலாந்து அணியின் ரோரி பர்ன்ஸ் -சிப்லி ஜோடி களமிறங்கினர். இந்திய அணியின் பும்ரா முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரின் 5-வது பந்தில் எல்பிடபுள்யூ முறையில் ரோரி பர்ன்ஸ்சை அவுட் ஆக்கினார். இதனையடுத்து சிப்லியுடன் - ஜாக் கிராவ்லி ஜோடி சேர்ந்து ஆடினார். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து ஆடிய இந்த ஜோடியை சிராஜ் பிரித்தார். அவர் வீசிய 20-வது ஓவரில் ரோரி பர்ன்ஸ் பேட்டில் ஊரசியதாக அம்பயரிடம் பலத்த முறையீட்டில் இந்திய அணியினர் ஈடுபட்டனர். ஆனால் அம்பயர் அவுட் கொடுக்கவில்லை.

கோலி ரிவ்யூ... 

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ரிவ்யூ கேட்கவா வேண்டாமா என சக வீரர்களிடம் ஆலோசனை நடத்தினார். அனைவரும் சந்தேகத்துடன் இருந்தனர். ரிஷப் பந்த் மட்டும் அவுட் என விராட் கோலியிடம் தொடர்ந்து கூறினார். இதனால்  விராட் கோலி ரிவ்யூ எடுத்தார். இந்நிலையில் இது 3-வது அம்பயருக்கு சென்றது. அதற்குள் விராட் கோலி தவறாக ரிவ்யூ எடுத்து விட்டோமோ என தலையில் கை வைத்தபடி இருந்தார். 3-வது அம்பயரின் முடிவில் அவுட் என வந்ததும் அனைத்து வீரர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். கேப்டன் விராட் கோலி அவர் பாணியில் ஆக்ரோசமாகவே மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

61 ரன்கள்...

இதனையடுத்து உணவு இடைவேளை வரை இந்திய அணியால் விக்கெட் ஏதும் எடுக்க முடியவில்லை. இங்கிலாந்து அணி 25 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்திருந்தது. ரூட் 12 ரன்களுடனும் சிப்லி 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து