முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் இன்று நிறை புத்தரிசி பூஜை

திங்கட்கிழமை, 16 ஆகஸ்ட் 2021      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : ஆவணி மற்றும் ஓணப் பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. தொடர்ந்து இன்று (16ம் தேதி) நிறை புத்தரிசி பூஜைகள் நடந்தது. விவசாயம், நாடு செழிக்கவும் இந்த பூஜை நடத்தப்படுகிறது. இதற்காக மேல்சாந்தி ஜெயராஜ் அதிகாலை 4 மணிக்கு நடை திறந்தார்.

முன்னதாக கோயில் அருகே அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்கள் 18ம் படிக்கு கீழ் கொண்டு வைக்கப்பட்டன. அதன் பிறகு மேல்சாந்தி, அர்ச்சகர்கள் நெற்கதிர்களை தலையில் சுமந்தபடி 18ம் படி வழியாக கோயில் முன்புள்ள மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

தொடர்ந்து 5.55-6.20க்கு மணிக்குள் நிறை புத்தரிசி பூஜைகள் தந்திரி மகேஷ் மோகனர் தலைமையில் நடைபெற்றன. ெதாடர்ந்து இன்று முதல் 8 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்க படுகின்றனர்.

அதுவும் தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும். ஆவணி மற்றும் ஓணம் சிறப்பு பூஜைகளுக்கு பின் வரும் 23ம் தேதி இரவு கோயில் நடை சாத்தப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து