முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தற்போது வைரலாகும் கோலியின் பேச்சு

புதன்கிழமை, 18 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லண்டன்: லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் புகழ்பெற்ற வெற்றியை ஈட்டியது இந்திய அணி. அதற்குக் காரணம் பவுலர்களின் பேட்டிங்கும் பவுலிங்கும்தானே தவிர விராட் கோலி கிடையாது. ஆனால் வீரர்களை மோட்டிவேட் செய்து அவர் பேசிய பேச்சு வைரலாகி வருகிறது.

271 ரன்கள் இலக்கு...

ஷமி, பும்ரா ஹீராயிக் இன்னிங்சுக்குப் பிறகு இங்கிலாந்துக்கு 271 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது, ஒருக்காலும் இதை இங்கிலாந்து விரட்டப்போவதில்லை, ட்ராவுக்குத்தான் ஆடப்போகின்றனர் என்பது திண்ணம் என்பதால் அவர்களை வீழ்த்துவது எளிதானது. ஒருவேளை அவர்கள் இலக்கு நோக்கி அடித்து ஆடியிருந்தால் ட்ராவாவது செய்திருக்கலாம்.

‘பெப் டாக்’... 

இந்நிலையில் இங்கிலாந்து தோல்வியிலிருந்து காத்துக் கொள்ள இறங்கிய தருணத்தில் விராட் கோலி அணி வீரர்களை சுற்றி நிறுத்திக் கொண்டு ‘பெப் டாக்’ ஒன்று கொடுத்தார், அது வழக்கமாக எல்லா கேப்டன்களும் கொடுக்கக் கூடியதுதான். ஆனால் கொடுப்பது விராட் கோலியாயிற்றே அதனால் அதற்கு முக்கியத்துவம் ஏற்பட்டு விட்டது.

நரகமாக இருக்க... 

“இந்த 60 ஓவர்கள் இங்கிலாந்துக்கு களத்தில் நரகமாக இருக்க வேண்டும்” என்று பவுலர்கள் வீரர்களுக்கு உத்வேகம் அளித்தார் கோலி. இது வீடியோவில் பதிவாகியுள்ளது. ஆனால் உண்மையில் இங்கிலாந்து வீரர்களுக்கு 60 ஓவர்கள் நரகமாக இல்லை, ‘ஐ’ படப் பாணியில் கூற வேண்டுமென்றால் ‘அதுக்கும் மேல’ என்று தான் சொல்ல வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து