முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை செப். 16-ம் தேதி திறப்பு

செவ்வாய்க்கிழமை, 24 ஆகஸ்ட் 2021      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் செப்டம்பர் 16-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 15-ம் தேதி திறக்கப்பட்டது. 16-ம் தேதி, புகழ் பெற்ற நிறை புத்தரிசி பூஜை நடந்தது. தொடர்ந்து, 21-ம் தேதி திருவோண சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடந்தது. கொரோனா கட்டுப்பாடு விதிகளுக்கு உட்பட்டு தினசரி 15 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஆவணி மாத பூஜை நிறைவு நாளான நேற்று முன்தினம் சபரிமலையில் சதயம் நாள் சிறப்பு பூஜை வழிபாடுகளுடன், 25 கலச பூஜை, களபாபிஷேகம், மாலையில் சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து படி பூஜை, புஷ்பாபிஷேகம் ஆகியவையும் நடந்தது. ஆவணி மாத பூஜைகள் நிறைவடைந்ததையொட்டி நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு சபரிமலை நடை அடைக்கப்பட்டது.

புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் செப்டம்பர் 16-ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின், 21-ம் தேதி இரவு நடை அடைக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து