முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் மத வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கான தடை தொடரும் : தமிழக அரசு அறிவிப்பு

புதன்கிழமை, 25 ஆகஸ்ட் 2021      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத்தலத்தில் பக்தர்கள் தடை தொடரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் வருகின்ற செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அதே போல் கடந்த 23-ம் தேதி முதல் தியேட்டர்கள். கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த 6-ம் தேதி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொது மக்கள் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி ,ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்தது.

இந்நிலையில் வெள்ளி சனி ஞாயிறுகளில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற நிலை தொடரும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பள்ளிகள் திறந்து ஒரு வாரம் கடந்த பின் கொரோனா குறைந்திருந்தால் வழிபாட்டு தலம் திறப்பு பற்றி முடிவெடுக்கப்படும் என்று கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் திறப்பு குறித்து மருத்துவத்துறை, வருவாய் ,பேரிடர் நிர்வாக துறை தகவல் தெரிவித்துள்ளது. 

கடற்கரை , தியேட்டர் திறப்பால் கொரோனா தொற்று எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களுக்காக காத்திருப்பதாகவும், கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்தால் கூடுதல் தளர்வுகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் விளக்கமளித்துள்ளது. ஊரடங்கில் பல தளர்வு அளிக்கப்பட்டாலும் இந்த நடைமுறையே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து