முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டணி என்பது தோளில் போட்டிருக்கும் துண்டு போலத்தான் - செல்லூர் கே.ராஜூ

புதன்கிழமை, 15 செப்டம்பர் 2021      அரசியல்
Image Unavailable

கூட்டணி என்பது தோளில் போட்டிருக்கும் துண்டு போலத்தான் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதையடுத்து, தேர்தல் பணிகள், கூட்டணி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. 

இதற்கிடையில், சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிந்த பாட்டாளி மக்கள் கட்சி நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என அறிவித்துள்ளது. 

இந்நிலையில், அ.தி.மு.க கூட்டணியில் இருந்து பா.ம.க. விலகியது  குறித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.-வும், முன்னாள்-அமைச்சருமான செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார். 

 

இது தொடர்பாக செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், கூட்டணி என்பது தோளில் போட்டிருக்கும் துண்டு போலத் தான், தேவையெனில் போட்டுக்கொள்வோம் இல்லையெனில் கழற்றி வைத்துவிடுவோம். கூட்டணியில் இருந்து பா.ம.க. வெளியேறியதில் வருத்தம் இல்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து