முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.எஸ்.கே எக்ஸ்பிரஸில் ' இணைந்த பிராவோ, டூப்ளசிஸ், இம்ரான் தாஹிர்

வெள்ளிக்கிழமை, 17 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

'ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களான டுவைன் பிராவோ, டூப்ளசிஸ், இம்ரான் தாஹிர் ஆகியோர் துபாய் வந்தடைந்தனர்.

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்த ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டு, இப்போது மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இந்தியாவில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் மீதமிருக்கும் 31 போட்டிகள் அமீரகத்தில் இருக்கும் அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜா மைதானங்களில் நடைபெற இருக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் 30-வது ஐ.பி.எல் லீக் போட்டியில் மும்பை - சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன.

துபாய் வந்தனர்...

இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக டோனி தலைமையிலான சிஎஸ்கே அணியின் வீரர்கள் சிலர் கடந்தமாதமே துபாய் சென்றுவிட்டனர். மேலும் அங்கு சுரேஷ் ரெய்னா, தோனி, அம்பத்தி ராயுடு, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக மொயின் அலி, சாம் கரண் உள்ளிட்ட வீரர்களும் துபாய் சென்றனர். இந்நிலையில் கரீபியன் ப்ரீமியல் லீக் போட்டிகள் முடிவடைந்ததையடுத்து டுவைன் பிராவோ, இம்ரான் தாஹிர் மற்றும் டூப்ளசிஸ் ஆகியோர் துபாய் சென்றுள்ளனர். இதுகுறித்து சென்னை  அணி டுவிட்டரில் பதிவிட்ட கருத்தில் ' மகிழ்ச்சி அளிக்கும் வகையில் 3 வீரர்கள் சென்னை அணி வீரர்கள் எக்ஸ்பிரஸில் இணைந்தனர்' எனத் தெரிவித்துள்ளது

7 போட்டிகள்...

2020-ம் ஆண்டு ஐ.பி.எல் சி.எஸ்.கே.வுக்கு மிக மோசமாகவே இருந்தது. ஆனால் இந்தாண்டு ஐ.பி.எல் சி.எஸ்.கே விஸ்வரூபம் எடுத்தது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றிப்பெற்று 10 புள்ளிகளுடன் பட்டியலில் 2-ம் இடத்தில் இருக்கிறது. "ப்ளே ஆஃப்" சுற்றுக்கு தகுதிப்பெற சி.எஸ்.கே இன்னும் 3 போட்டிகளில் வெற்றிப்பெற்றால் போதுமானதாக இருக்கும். அமீரகத்தில் இன்னும் 7 போட்டிகளில் சி.எஸ்.கே  பங்கேற்கிறது. இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் சனிக்கிழமை முதல் ஐ.பி.எல் போட்டிகள் தொடங்க இருக்கிறது.

 

அதேபோல மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்டார் ஆல்ரவுண்டர் பொலார்ட்  அபு தாபி வந்து சேர்ந்துள்ளார். சமீபத்தில் முடிந்த கரீபியன் ப்ரீமியர் 20 ஓவர் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக பொலார்ட் இருந்தார்., அபு தாபியில் 2 நாட்கள் தனிமை மற்றும் பரிசோதனைக்குப்பின் பொலார்ட் மும்பை இந்தியன்ஸ் அணியில்  இணைவார். மும்பை இந்தியன்ஸ் அணி டுவிட்டரில் பதிவிட்ட கருத்தில் ' மிகப்பெரிய மனிதர் வந்துவிட்டார். எங்களின் ஒட்டுமொத்த குடும்பமும் ஒரு குடைக்குள் வந்துவிட்டது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து