முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடைசி ஓவர்களை சரியாக வீசவில்லை: தோல்வி குறித்து பொலார்டு வேதனை

திங்கட்கிழமை, 20 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

துபாய் : ஒரு பேட்ஸ்மென் கடைசி வரை ஆடினால் உண்மையில் அது ஒரு அணியை பாதிக்கவே செய்யும். பந்து வீச்சில் கடைசி ஓவர்களை சரியாக வீசவில்லை என்று தோல்வி குறித்து மும்பை கேப்டன் பொலார்டு வேதனை தெரிவித்துள்ளார். 

பாதிக்க செய்யும்...

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொலார்டு கூறும்போது, “ருதுராஜ் உண்மையாக நன்றாகவே பேட்டிங் செய்தார். டி-20 கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மென் கடைசி வரை ஆடினால் உண்மையில் அது ஒரு அணியை பாதிக்கவே செய்யும். பந்து வீச்சில் கடைசி ஓவர்களை சரியாக வீசவில்லை. 20 ரன்களில் தோற்பது என்றால் கூடுதல் ரன்களைக் கொடுத்திருக்கிறோம் என்றே அர்த்தம்.

எட்டியிருக்கலாம்...

பிட்ச் நன்றாக இருந்தது, புதிய பந்து ஸ்விங் ஆனது. எங்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் தொடக்க விக்கெட்டுகளை எடுத்தனர். அவர்கள் 150+ ரன்களை எடுத்தாலும் நாங்கள் இலக்கை எட்டியிருக்கலாம். 3 விக்கெட்டுகளை இழந்தது பாவச்செயல். சூழ்நிலையைக் கணக்கில் எடுத்து கொண்டால் சவுரவ் திவாரி நன்றாக பேட் செய்தார்” இவ்வாறு கூறினார் பொலார்டு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து