முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தல்: இன்று முதல் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்

புதன்கிழமை, 22 செப்டம்பர் 2021      அரசியல்
Image Unavailable

Source: provided

சென்னை : உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சி, இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி இன்று முதல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். 

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வருகிற அக்டோபர் 6, 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

கடந்த 15-ம் தேதி முதல் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நேற்று 22-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இன்று 23-ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையும் வரும் 25-ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன. 

இந்நிலையில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று முதல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களுக்கும் சென்று கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் அப்பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட உள்ளார். இன்று காலை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து