முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 மக்களவை, 30 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 30-ம் தேதி இடைத்தேர்தல் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 28 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : நாட்டில் 3 மக்களவைத் தொகுதிகள், 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 30-ம் தேதி நடக்கும் என்றும், தேர்தல் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 2-ம் தேதி நடைபெறும் என்றும் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

''நாட்டில் கொரோனா தொற்று, மழை வெள்ளம், பண்டிகைக் காலம், குறிப்பிட்ட பகுதிகளில் நிலவும் குளிர்காலம் ஆகியவற்றை ஆய்வு செய்து, அனைத்துச் சூழல்களையும் கருத்தில் கொண்டு காலியாக இருக்கும் 3 மக்களவைத் தொகுதிகள், தாத்ரா நாகர் ஹாவேலி, டாமன் டையூ, மத்தியப் பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காலியாக இருக்கும் 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளது. இதன்படி இடைத் தேர்தல் அக்டோபர் 30-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை நவம்பர் 2-ம் தேதியும் நடக்கும்''.

இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து