முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எரிமலையால் சேதமடைந்த வீடுகள்: முதல்கட்ட நிவாரண நிதியை அறிவித்தது ஸ்பெயின் அரசு

புதன்கிழமை, 29 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

எரிமலையால் சேதமடைந்த வீடுகள் மற்றும் தோட்டங்களுக்கு முதல்கட்டமாக 10.5 மில்லியன் யுரோவை நிவாரண நிதியாக ஸ்பெயின் அரசு விடுவித்துள்ளது.

ஸ்பெயினில் எரிமலை வெடித்ததில், எரிமலைக் குழும்பு தொடர்ந்து வெளியேறி வருகிறது. லா பால்மா தீவில் உள்ள எரிமலை கடந்த 19-ம் தேதி வெடித்தது. சில நாட்கள் அமைதி காத்த எரிமலை, மீண்டும் லாவா என்னும் எரிமலைக் குழம்பை கொப்பளிக்கத் தொடங்கியுள்ளது. இந்த எரிமலைக் குழம்பு ஆறு போல ஓடி அட்லாண்டிக் கடலை நோக்கிச் சென்றது. 

 

லாவா ஓடிய பாதையில் இருந்த 600க்கும் அதிகமான வீடுகள், வாழைத்தோட்டங்கள், வழிப்பாட்டு தலங்கள் கடுமையாக சேதமடைந்தன. இந்த நிலையில், முதல்கட்டமாக 10.5 மில்லியன் யுரோவை நிவாரண நிதியாக ஸ்பெயின் அரசு விடுவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து