முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவகுமாரின் சபதம் – விமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 3 அக்டோபர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

காஞ்சிபுரத்தில் வசித்து வருபவர் ஹிப் ஹாப் ஆதியின் தாத்தா வரதராஜன் நெசவு தொழிலை பரம்பரையாக செய்து வருகிறார். குடும்பத்தில் ஒரு பிரச்சனை திடீரென உருவானதும் நெசவுத் தொழிலை தொடமாட்டேன் என சபதம் போடுகிறார். 

இதனால் குடும்பம் வறுமையில் சிக்கி, பின்னர், பிரிந்து உறவுக்காரர்கள் சென்னைக்கு போகிறார்கள். தாத்தாவும் பேரனும் மட்டும் காஞ்சிபுரத்திலேயே தங்கி விடுகிறார்கள். ஒரு கட்டத்தில் ஆதியின் சித்தப்பா ராகுல் மூலம் குடும்பத்தில் மீண்டும் பிரச்சனை வருகிறது. இப்போது இப்பிரச்சனையை போக்க ஒரு சபதம் எடுக்கிறார் பேரன் சிவக்குமார்.

சபதம் நிறைவேறியதா என்பதுதான் கிளைமாக்ஸ். கதை திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, நடிப்பு மற்றும் இயக்கம் என புகுந்து விளையாடியிருக்கிறார் ஆதி. எப்போதும் போல் கலகலப்பாக நடித்துள்ளார். கதிர், Prank ராகுல், கதாநாயகி மாதுரி, தாத்தா வரதராஜன் என அனைத்து கதாபாத்திரமும் கன கச்சிதமாக பொருந்தியுள்ளது.

நெசவு தொழிலாளர்களின் வாழ்க்கையை உலகுக்கு தெரியவைக்க முயற்சித்திருக்கும் ஆதிக்கு பாராட்டுக்கள். ஆனாலும்,  அதிகமான பட பாடல்களையும் துதி பாடலையும் தவிர்த்து, ஒரு நேர் கோட்டில் சென்றிருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும். மொத்தத்தில் ஒரு முறை பார்க்ககூடிய ஓகே ரக படம் தான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து