முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாட்டு பயணிகளுக்கு கேரளாவில் புதிய கட்டுப்பாடுகள்

ஞாயிற்றுக்கிழமை, 3 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : ஐரோப்பா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு 7 நாள் தனிமைப்படுத்தலை இந்தியா வலியுறுத்தி உள்ளது. மேலும் இங்கிலாந்தில் இருந்து வரும் மக்கள் கட்டாயமாக 10 நாள்களுக்கு தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டுப்பாடுகள், அக்டோபர் 4ஆம் (இன்று) தேதி முதல் அமலுக்கு வர உள்ளன. வெளிநாட்டு பயணிகள் தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் செலுத்தாவிட்டாலும், விமான நிலையத்தில் ஆர்.டி. - பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ள வேண்டும். மாதிரிகள் சோதனையில் கொரோனா இல்லை என்று தெரியும்பட்சத்தில், 14 நாள்கள் வரை தங்களை கண்காணித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி கேரளாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த விவரங்களை மாநில அரசிடம், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது. இதை, கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து