எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : பொதுமக்கள் 5 பவுன் வரை தங்களது நகைகளை வங்கிகளில் அடகு வைத்துக் கடன் வாங்கத் தூண்டியது யார்?, அனைத்து கூட்டுறவு சங்கங்களின் மீதும் பொதுவாகப் பழி சுமத்துவது ஏன் என்று கூட்டுறவுத் துறை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தங்கள் உழைப்பை வியர்வையாய் சிந்தி, இந்நாட்டு மக்களுக்கு உணவு அளிக்கக்கூடிய வேளாண் பெருமக்கள், புயல், மழை, வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற இயற்கைச் சீற்றங்களால் பாதிப்படையும்போது, தாங்கள் பயிரிட்ட வேளாண் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்காமல், விலைக் குறைவால் நஷ்டத்திற்கு உள்ளாகும் சமயங்களில், அரசு, விவசாயிகளின் சிரமத்தில் பங்குகொள்ளும் வகையில், அவர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வாங்கிய கடன்களுக்கு வட்டி தள்ளுபடி, கடன் தள்ளுபடி என்று நிலைமைக்குத் தக்கவாறு முடிவெடுத்து, விவசாயிகளின் துயரத்தில் பங்கு கொள்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக விவசாயிகள், தங்கள் விளைபொருட்களுக்கு ஏற்ப விலை இல்லாத நிலையில், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான விலை கிடைக்கவில்லை. இதனால் பெருத்த நஷ்டத்திற்கு உள்ளாகினர். எனவே, தொடர்ந்து விவசாயிகள் வேளாண் கடன் மற்றும் நகைக் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகி உள்ளனர். எனவேதான், அ.தி.மு.க. அரசு விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்து அதற்கான அரசாணையையும் வெளியிட்டது.
பொதுவாக, ஒரு விவசாயி குடியிருக்கும் இடம் ஒன்றாக இருக்கும். அவருடைய நிலங்கள் அந்த கிராமத்திலோ அல்லது பக்கத்தில் உள்ள கிராமங்களிலோ இருக்கும். அப்படிப்பட்ட சமயங்களில், அந்த விவசாயினுடைய நிலங்கள் எந்தெந்த கிராமங்களில் உள்ளதோ, அந்தந்த கிராமங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மூலம்தான் வேளாண் பயிர்க் கடன் வாங்குவார்கள். அதுதான் கூட்டுறவு சங்கங்களின் விதியும் கூட. இம்முறையில்தான் வேளாண் கடனும் ஆண்டாண்டு காலமாகத் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், வேளாண் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகத்தான் வெளியிடப்பட்டது. எனவே, தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன் வேளாண் கடன்கள் பெற்ற அனைத்து விவசாயிகளும், முறைகேடாகக் கடன் பெற்றவர்களா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அதேபோல், தேர்தல் சமயத்தில் தி.மு.க.வின் தலைவரும், அவரது வாரிசும் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில், தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கூட்டுறவு வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் 5 பவுன் வரை தமிழக மக்கள் வாங்கிய நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும்; நீங்கள் உடனே வங்கிகளில் 5 பவுன் வரை அடகு வைத்து நகைக் கடன் பெற்றுக்கொள்ளுங்கள்; நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம், வந்தவுடன் உங்களது நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் பொதுமக்களைத் தூண்டிவிடும் வகையில் பேசியதை அனைத்து ஊடகங்களும், தினசரி நாளிதழ்களும் செய்திகளாக வெளியிட்டிருந்தன.
தி.மு.க. தேர்தல் அறிவிப்பு வாக்குறுதிகள் வெளியிட்டபோதும், தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசும்பொழுதும், குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று, எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. இவர்களது பேச்சை நம்பி, 5 பவுன் வரை குடும்பத்தில் உள்ள அனைவரும் நகைகளை வங்கிகளில் வைத்துக் கடன் பெற்றனர். இந்தக் குழப்பத்திற்குக் காரணம் தி.மு.க.வின் தேர்தல் அறிவிப்பு வாக்குறுதிதான். தற்போது, மக்கள் நகைக் கடனுக்குத் தேவையின்றி வட்டி கட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.
அனைவருக்கும் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துவிட்டு, தற்போது பலவிதமான நிபந்தனைகளை விதிப்பது; நகைக் கடன் வழங்கியதில் முறைகேடுகள் செய்துவிட்டதாகவும், மோசடியில் ஈடுபட்டதாகவும் கூட்டுறவு சங்கங்கள் மீதும், அதன் பணியாளர்கள் மீதும், கடன் பெற்ற பொதுமக்கள் மீதும் குற்றம் சுமத்திப் பேசுவது, அனைவரையும் கொச்சைப்படுத்துவதாக இருக்கிறது.
இப்படி, பொதுமக்கள் 5 பவுன் வரை தங்களது நகைகளை வங்கிகளில் அடகு வைத்துக் கடன் வாங்கத் தூண்டியது யார்? நகைக் கடன் மட்டுமல்ல, நிறைய நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றை நிறைவேற்ற முடியாத நிலையில், மற்றவர்கள் மேல் பழி போடுவது யார் ?
ஒரு உன்னத நோக்கத்துடன் 'கூட்டுறவே நாட்டுயர்வு என்று நமது முன்னோர்களால் திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்ட கூட்டுறவு இயக்கம், இன்று தமிழ்நாடு முழுவதும் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒருசில கூட்டுறவு சங்கங்கள் தவிர, தமிழ்நாட்டில் 99 சதவீதக் கூட்டுறவு சங்கங்கள் தங்கள் பகுதியில் உள்ள விவசாய உறுப்பினர்களுக்குத் தேவைப்படும் நேரங்களில் (உழவுப் பணிகளுக்காக), குறைந்த வட்டிக்குக் கடன் அளித்தல், விதை மற்றும் உரங்கள் வழங்கி உதவுதல், நகைக் கடன் அளித்தல், வீட்டுக் கடன் அளித்தல் மற்றும் அந்த கிராமங்களில் நியாய விலைக் கடைகளை நடத்துதல் போன்ற சேவைகளை அந்தந்தப் பகுதி மக்களுக்கு அளித்து வருகிறது.
வேளாண் பயிர்க் கடன் வழங்கியதிலும், நகைக் கடன் வழங்கியதிலும் ஏதேனும் தவறுகள் நடந்திருந்தால், அத்தவறுக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, அனைத்து சங்கங்களின் மீதும் பொதுவாகப் பழி சுமத்தக் கூடாது.
இவ்வாறு செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது: