எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐ.பி.எல் 50-வது லீக் ஆட்டத்தில் ஒற்றை கேட்சில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்திற்கு சறுக்கி உள்ளது.
முதலிடத்தில்...
ஐ.பி.எல் 2021 சீசனின் 50-வது போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற்றது. டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. 136 ரன்கள் மட்டுமே குவித்திருந்த சென்னைக்கு எதிராக 139 ரன்களை அடித்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறது டெல்லி. அதற்கு சென்னையின் கிருஷ்ணப்பா கெளதம் விட்ட அந்த ஒரு கேட்ச் வலுவான காரணமாக அமைந்தது.
டெல்லி பந்துவீச்சு...
டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்துவீச தீர்மானித்தது. பேட்டிங் களமிறங்கிய சென்னையின் தொடக்க ஆட்டக்காரர்களான ஃபாஃப் டூப்ளசி (10 ரன்கள்) மற்றும் ரிதுராஜ் கெய்க்வாட் (13 ரன்கள்) பவர் ப்ளே ஓவர்களுக்குள்ளேயே சொற்ப ரன்களில் வெளியேறி ஒட்டுமொத்த சென்னை ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்தனர். அடுத்தடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பா, மொயின் அலி ஆகியோரும் முறையே 19 மற்றும் 5 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, சென்னையின் மிடில் ஆர்டர் பேட்டர்களின் தலையில் மொத்த சுமையும் இறங்கியது.
டோனி 18 ரன்கள்...
அம்பதி ராயுடு மிக பொறுப்போடு 43 பந்துகளுக்கு 55 ரன்களைக் எடுத்து அணியை கெளரவமான ஸ்கோரை நோக்கி நகர்த்தினார். மகேந்திர சிங் டோனி ஸ்ட்ரைக்கை சுழற்றினாலும், தன்னுடைய ஸ்ட்ரைக் ரேட்டை பராமரிக்க முடியாமல் திணறியது போலத் தெரிந்தது. 27 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே குவித்திருந்தார். ஒருவழியாக தட்டுத்தடுமாறி சென்னை 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களைக் குவித்தது சென்னை. துபாய் போன்ற பிட்சில் அதிக ரன்கள் குவிப்பது சிரமம் என்றாலும், டெல்லி போன்ற வலுவான அணிக்கு இது எளிதான ஸ்கோராக இருக்கலாம் என கூறப்பட்டது.
அக்ஸர் படேல்...
டெல்லி அணியின் அக்ஸர் படேல் 4 ஓவர்களுக்கு 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து டூப்ளசி உட்பட இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஸ்வின் 4 ஓவர்களில் 20 ரன்களுக்கு உத்தப்பாவின் விக்கெட்டையும், அவேஷ் கான் 4 ஓவர்களில் 35 ரன்கள் கொடுத்து டோனியின் விக்கெட்டையும், அன்ரிக் நார்ட்ஜ் 4 ஓவர்களில் 37 ரன்கள் கொடுத்து ரிதுராஜின் விக்கெட்டையும் வீழ்த்தினர். ரபாடா விக்கெட்டுக்களை வீழ்த்தவில்லை என்றாலும், 4 ஓவர்களில் 21 ரன்களை மட்டுமே கொடுத்தார்.
தவான் - ப்ரித்வி...
136 அடித்தால் வெற்றி என களமிறங்கிய டெல்லி அணியின் ப்ரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் இணை 24 ரன்களில் பிரிக்கப்பட்டது. 18 ரன்களோடு பெவிலியன் திரும்பினார் ப்ரித்வி. அடுத்த வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 2 ரன்களுக்கு தன் விக்கெட்டை பறிகொடுத்தார். அணித்தலைவர் ரிஷப் பந்த் நிதானம் காட்டி 15 ரன்களில் வெளியேறினார்.அடுத்த வந்த ரிபல் படேல் கூட 18 ரன்கள் குவித்தார். இப்படி டெல்லி அணியின் முதல் நான்கு ஜோடிகள் தலா 20 - 27 ரன்கள் குவித்தன. ஹெட்மேயர் மற்றும் அக்ஸர் படேல் ஜோடி 27 பந்துகளுக்கு 36 ரன்களைக் குவித்தது.
ஷர்துல் தாகூர்...
19.4-வது பந்தில் ப்ராவோ வீசிய பந்தை ரபாடா பவுண்டரிக்கு அனுப்பி டெல்லியை வெற்றி பெறச் செய்தார். இந்த போட்டியிலும், வழக்கம் போல முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தும் ஷர்துல் தாகூர் சென்னைக்கு கைகொடுத்தார். ஷர்துல் தாகூர் 4 ஓவர்களில் 13 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து சென்னைக்கு பெரும் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்த ஷிகர் தவான் உட்பட இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா 4 ஓவர்களில் 28 ரன்களைக் கொடுத்து ரிஷப் பந்த் உட்பட 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ப்ராவோ, தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
கிருஷ்ணப்பா கெளதம்...
இந்த போட்டியிலேயே அதிக ரன்கள் பறிபோனது, சென்னை வீசிய ஐந்தாவது ஓவரில் தான். அந்த ஒரு ஓவரில் மட்டும் 21 ரன்கள் பறிபோனது. அந்த இடத்திலிருந்து டெல்லி மிக வலுவாக போட்டியில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. 17.3-வது ஓவரில் ஹெட்மேயர் அடித்த ஒரு பந்தை கிருஷ்ணப்பா கெளதம் தவறவிட்டது ஒட்டுமொத்த ஆட்டத்தையும் திருப்பிவிட்டது. இந்த இரு தவறுகளை சரி செய்திருந்தால் சென்னை வெற்றி பெற்றிருக்க அதிக வாய்ப்பு இருந்திருக்கும். டெல்லியின் வெற்றியால், கடந்த பல நாட்களாக புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த சென்னை, தற்போது இரண்டாமிடத்துக்கு வந்திருக்கிறது. டெல்லி 10 போட்டிகளில் வென்று 20 புள்ளிகளோடு முதலிடத்தில் இருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 10 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
22 Apr 2024புதுடெல்லி : நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்.
-
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி: உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய தமிழக வீரர் குகேஷ்
22 Apr 2024ஒட்டோவா : கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார்.
-
அமெரிக்கா: விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
22 Apr 2024நியூயார்க் : அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் சிட்டி நகரில் கார் ஒன்றில் இந்திய மாணவர்கள் இருவர் பயணம் செய்தபோது, எதிர் திசையில் இருந்து விரைவாக வந்த மற்றொரு
-
விராட் கோலிக்கு அபராதம்
22 Apr 2024ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
-
நடிகர் ரஜினி பட தலைப்பு அறிவிப்பு
22 Apr 2024சென்னை : ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது.
-
இன்டியா கூட்டணி வென்றால் முழு ஆதரவு வழங்குவோம் : மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு
22 Apr 2024கொல்கத்தா : இன்டியா கூட்டணி வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு தருவோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது குஜராத்
22 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.
-
கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் முடிந்தது
22 Apr 2024பெங்களூரு : கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது.
-
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
22 Apr 2024புதுடில்லி : பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
-
கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதிக்க நிபுணர் குழு அமைக்க எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு கோர்ட் உத்தரவு
22 Apr 2024டெல்லி : கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதனை செய்ய நிபுணர் குழு அமைக்கும்படி டெல்லி எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பெங்களூரு, பஞ்சாப் அணி கேப்டன்களுக்கு அபராதம் : ஐ.பி.எல். நிர்வாகம் நடவடிக்கை
22 Apr 2024மும்பை : பெங்களூரு அணி கேப்டன் டு பிளெஸ்சிஸ், பஞ்சாப் அணி கேப்டன் சாம் கர்ரனுக்கு அபராதம் விதித்துள்ளது ஐ.பி.எல். நிர்வாகம்.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.