முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த சீசனிலும் மஞ்சள் நிற ஜெர்சியில்... டோனியின் புதிரான பதிலால் குழப்பம்

வியாழக்கிழமை, 7 அக்டோபர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

துபாய்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான டாஸின் போது புதிர் போடும் விதமாக பேசியுள்ளார். இதில் அடுத்த சீசனில் அவர் விளையாடுவது குறித்தும் தெரிவித்துள்ளார். 

மஞ்சள் நிற ஜெர்சி...

“உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது மிகவும் கடினம். ஐபிஎல் தொடரை ஒத்திவைப்பது என்பது குறைவான கால கட்டத்திகள் அதிக போட்டிகள் விளையாட வேண்டி இருக்கும். தனிப்பட்ட முறையில் அதனால் எந்த கவலையும் இல்லை.  அடுத்த சீசனிள் நிச்சயம் நீங்கள் என்னை மஞ்சள் நிற ஜெர்சியில் பார்க்கலாம். ஆனால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நான் விளையாடுவேனா என்பது தெரியாது. அடுத்து வரவுள்ள மாற்றங்களில் ஒரு ஸ்திரத்தன்மை இல்லாமல் இருக்கலாம். புதிதாக இரண்டு அணிகள் வர உள்ளன. வீரர்களை தக்கவைத்துக் கொள்ளும் விதிகளிலும் மாற்றம் இருக்கும்” என டோனி தெரிவித்துள்ளார்.  

ரசிகர்கள் சந்தேகம்...

அதனால், டோனி அடுத்த சீசனில் ஒரு வீரராக விளையாடுவாரா? என்பது சந்தேகம் தான் என ரசிகர்கள் கருதத்  தொடங்கிவிட்டனர். இருப்பினும் மஞ்சள் ஆடையில் இருப்பேன் என டோனி சொல்லியுள்ளதால் அவர் நிச்சயம் அணியின் ஆலோசகராக இருப்பார் என்றே தெரிகிறது. அதாவது பிளமிங் உடன் பணியை பகிர்ந்து கொள்வார் என்றே சொல்லலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து