முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக். 15 முதல் வெளிநாட்டினருக்கு சுற்றுலா விசா வழங்க நடவடிக்கை : மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 8 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : அக்டோபர் 15-ம் தேதி முதல் வெளிநாட்டு பயணிகளுக்கான சுற்றுலா விசா வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், சுற்றுலா விசா வழங்குமாறு, பல்வேறு மாநிலங்கள் மத்திய அரசை வலியுறுத்தி வந்தன. அதைத்தொடர்ந்து, அக்டோபர் 15-ம் தேதி முதல் வெளிநாட்டு பயணிகளுக்கான சுற்றுலா விசா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

பிசினஸ் விமானம் சாட்டர்டு ஃப்ளைட்ஸ் மூலம் இந்தியா வரும் வெளிநாட்டினருக்கு அக்டோபர் 15 முதல் சுற்றுலா விசாவும், மற்ற விமானங்களில் வரும் வெளிநாட்டினருக்கு நவம்பர் 16-ம் தேதி முதல் விசா வழங்கும் முறை செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து