முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய வானதி சீனிவாசன் உள்பட 14 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு

வெள்ளிக்கிழமை, 8 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

கோவை : தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 14 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கோயில்களில் பக்தர்களின் தரிசனத்துக்குத் தமிழக அரசு தடைவிதித்துள்ளது.

இந்நிலையில், வாரத்தின் அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்கவும், பக்தர்களை அனுமதிக்கவும் வலியுறுத்தி, பா.ஜ.க. சார்பில் கோவை தண்டுமாரியம்மன் கோயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

காவல்துறையின் தடையை மீறி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், பா.ஜ.க. தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன், மாநில பொதுச் செயலாளர் ஜி.கே.எஸ்.செல்வக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக, ரேஸ்கோர்ஸ் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரஜினிகாந்த் ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில் கொரோனா காலத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

இது தொடர்பான புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர், சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், கொரோனா தொற்றுப் பரவும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 14 பா.ஜ.க. தலைவர்கள், நிர்வாகிகள் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

இதே போல் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து