முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் தொடர்ந்து 2 வாரங்களாக தினசரி ' கொரோனா தொற்று ' 30 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது

வெள்ளிக்கிழமை, 8 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

இந்தியாவில் தொடர்ந்து இரு வாரங்களாக கொரோனாவில் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. புதிதாக 21 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.,

''கொரோனாவால் புதிதாக 21 ஆயிரத்து 257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 39 லட்சத்து 15 ஆயிரத்து 569 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்து 40 ஆயிரத்து 221 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சையில் இருப்போர் வீதம் 0.71 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த 205 நாட்களில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை குறைவாக இருப்பது இதுதான் முதல் முறையாகும். அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து 14 நாட்களாக தினசரி பாதிப்பும் 30 ஆயிரத்துக்கும் குறைந்து வருகிறது.

கொரோனாவிலிருந்து இதுவரை 3 கோடியே 32 லட்சத்து 25 ஆயிரத்து 221 பேர் குணமடைந்தனர். குணமடைந்தோர் சதவீதம் 97.96 ஆக அதிகரித்துள்ளது. 3,977 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கொரோனாவால் 271 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 50 ஆயிரத்து 127 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை ஏறக்குறைய 58 கோடிக்கும் அதிகமான கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13 லட்சத்து 85 ஆயிரத்து 706 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. 93.17 கோடி பேருக்கும் அதிகமாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''.

 

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து