முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வலுவான கம்பேக் கொடுப்போம்: டெல்லி வீரர் பிருத்வி ஷா உறுதி

திங்கட்கிழமை, 11 அக்டோபர் 2021      விளையாட்டு
Image Unavailable

வலுவான கம்பேக் கொடுப்போம் என்று டெல்லி அணியின் இளம் வீரரும், அதிரடி ஆட்டக்காரருமான பிருத்வி ஷா தெரிவித்துள்ளார்.

சென்னை வெற்றி...

நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் பிளே-ஆஃப் போட்டியில் டெல்லியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த நிலையில் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி குறித்து தனது எண்ண ஓட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் டெல்லி அணியின் அதிரடி பேட்ஸ்மேன் பிருத்வி ஷா.

வலுவாக கம்பேக்....

“இப்போதைக்கு அணியில் அனைவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து வருகிறோம். எங்களது செயல்பாட்டுக்கு ஒட்டுமொத்த அணியும் பொறுப்பேற்றுக் கொள்கிறது. அது வெற்றியானாலும் சரி, தோல்வியானாலும் சரி. அடுத்த போட்டியில் வலுவாக கம்பேக் கொடுப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த தோல்வியை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  இருந்தாலும் இறுதி போட்டிக்குள் நுழைய எங்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு உள்ளது. அந்த நம்பிக்கையில் நாங்கள் இப்போது உள்ளோம். 

அபாயகரமான...

 

கிரிக்கெட் விளையாட்டின் மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவர் சென்னை அணியின் கேப்டன் டோனி. பலமுறை தனது அபாரமான பேட்டிங் திறன் மூலம் அணிக்கு தேவைப்படும் வெற்றியை இறுதிவரை களத்தில் நின்று முடித்துக் கொடுத்துள்ளார். டோனியை ஒரு தலைவராகவும், பேட்ஸ்மேனாகவும் பக்கத்தில் இருந்து பார்த்தது எனது அதிர்ஷ்டம் என நான் கருதுகிறேன்” என தெரிவித்துள்ளார் பிருத்வி ஷா. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து