முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோலியின் கனவு கலைந்தது: சுனில் நரைன் அதிரடியில் கொல்கத்தா அணி வெற்றி

செவ்வாய்க்கிழமை, 12 அக்டோபர் 2021      விளையாட்டு
Image Unavailable

சுனில் நரைன் அதிரடியில் பெங்களூரை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் கேப்டனாக ஐ.பி.எல். கோப்பை வெல்ல வேண்டும என்ற கோலியின் கனவு கலைந்தது. இந்த வெற்றி மூலம் எலிமினேட்டர் 2-வது சுற்றுக்கு கொல்கத்தா முன்னேறியுள்ளது.

பேட்டிங் தேர்வு... 

சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நடப்பு ஐபிஎல் சீசனின் எலிமினேட்டரில் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூர் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 138 ரன்களை எடுத்தது. பெங்களூர் அணியின் பேட்டிங் ஆர்டரை மொத்தமாக காலி செய்திருந்தார் சுனில் நரைன். 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது கொல்கத்தா. 

அடுத்தடுத்து அவுட்...

அந்த அணிக்காக கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 41 ரன்களை எடுத்திருந்தனர். கில் 29 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து வந்த ராகுல் திரிபாதி 6 ரன்களில் அவுட்டானார். வெங்கடேஷ் ஐயர் 26 ரன்களில் அவுட்டானார். நித்திஷ் ராணா 23 ரன்களில் அவுட்டானார்.  

சுனில் நரைன் அபாரம்...

ஐந்தாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய சுனில் நரைன், 15 பந்துகளில் 26 ரன்களை சேர்த்தார். அவர் சந்தித்த முதல் நான்கு பந்துகளில் 19 ரன்களை எடுத்திருந்தார். அது கொல்கத்தா அணிக்கு உதவியது. இருப்பினும் சிராஜ் வீசிய 18-வது ஓவரில் போல்டானார். அதே ஓவரில் தினேஷ் கார்த்திக் விக்கெட்டையும் வீழத்தியிருந்தார் அவர். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் அவர். அதோடு ஐபிஎல் அரங்கில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அவர். 

பிராவோ சாதனை...

மறுபக்கம் பெங்களூர் அணியின் மற்றொரு பவுலர் ஹர்ஷல் பட்டேல் நடப்பு சீசனில் 32 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதன் மூலம் ஒரே சீசனில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பிராவோவின் சாதனையை சமன் செய்துள்ளார் அவர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் மற்றும் ஷகிப் அல் ஹசன் களத்தில் இருந்தனர். நான்கு பந்துகளில் வெற்றிக்கு தேவைப்பட 7 ரன்களை எடுத்து நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கொல்கத்தா. இந்த வெற்றியின் மூலம் இன்று நடைபெறும் 2-வது பிளே-ஆஃப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா விளையாடுகிறது. 

கண்ணீர் சிந்திய கோலி

புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது பெங்களூர். எலிமினேட்டரில் கொல்கத்தாவிடம் தோல்வியை தழுவி தொடரை விட்டு தற்போது வெளியேறியுள்ளது. எலிமினேட்டர் போட்டி முடிந்ததும் கோலி கண் கலங்கிய காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது. அவருடன் டிவில்லியர்ஸும் கண் கலங்கியது கேமராவில் பதிவாகி உள்ளது.

 

“ஐபிஎல்-லில் நான் விளையாடினால் அது பெங்களூர் அணிக்காக மட்டும் தான் இருக்கும். இது என்றுமே மாறாது” என தோல்விக்கு பிறகு கோலி சொல்லி இருந்தார். 139 ரன்கள் என்ற குறைவான இலக்கையே நிர்ணயித்தாலும் கடைசி வரை வெற்றிக்காக போராடினார் விராட் கோலி. அவர் நம்பிக்கையுடன் ஆட்டத்தை அணுகியதுதான் கடைசி ஓவர்வரை போட்டி சென்றது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து