முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளத்தில் பயங்கரம்: பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 28 பேர் பலி

புதன்கிழமை, 13 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

காத்மண்டு : நேபாளத்தில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 28 பேர் உயிரிழந்தனர்.

நேபாளத்தின் லும்பினி மாகாணம் பேங்கி மாவட்டத்தில் இருந்து முகு மாவட்டத்திற்கு 45 பயணிகளுடன் முகு மாவட்டத்திற்கு பஸ் சென்றுகொண்டிருந்தது.  மலைப்பாங்கான பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது பஸ்சின் முன் டையர் திடீரென ’பஞ்சர்’ ஆனது.

இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 28 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த பயணிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ்சில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் தசாரா பண்டிக்கைக்காக சொந்த ஊர் சென்றுகொண்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து