முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சசிகலா மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் - எடப்பாடி பழனிசாமி

புதன்கிழமை, 20 அக்டோபர் 2021      அரசியல்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

அ.தி.மு.க.விற்கும் சசிகலாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை சசிகலா பொதுச்செயலாளர் என கூறிவருவதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம்.  நீதிமன்றம் தேர்தல் ஆணையம் என அனைத்துமே நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என்று ஏற்கனவே தெளிவுப்பட தெரிவித்துவிட்டன. 

அதனால், சசிகலா பேசுவதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. அவர் எங்கள் கட்சியிலேயே இல்லை. ஊடகங்களே அவர் பேசுவதை பரபரப்பிற்காக பெரிதுப்படுத்துகின்றனர்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது வேண்டும் என்றே திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கத்தோடு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து வருகிறது, மடியில் கனம் இல்லை விழியில் பயம் இல்லை. 5 மாத கால ஆட்சியில் கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன் மட்டுமே தி.மு.க. செய்து வருகிறது.ஊரக உள்ளாட்சி தேர்தலில் பணம் கொடுத்து மட்டுமே தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

இவ்வாறு எடப்பாடி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து