முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹர்திக் பாண்ட்யா விரைவில் பந்துவீச தொடங்குவார் : ரோகித் ஷர்மா நம்பிக்கை

புதன்கிழமை, 20 அக்டோபர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மஸ்கட் : இந்திய டி20 கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் ஷர்மா, ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவின் உடல் தகுதி குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இதனை இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் பயிற்சி ஆட்டத்தின் டாஸின் போது சொல்லியிருந்தார் ரோகித். 

6-வது வீரராக...

அணியில் ஆறாவது பவுலிங் ஆப்ஷனாக ஒருவரது தேவை இருக்கிறது. மெயின் பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினாலும் ஒரு ஆப்ஷனாக ஆறாவது பவுலர் தேவைப்படுகிறார். களத்தில் ஏதேனும் ஒருநாள் பாதகமாக அமையும் போது அந்த ஆறாவது பவுலர் ஆப்ஷன் பெரிதும் உதவும்.  

தயாராகி வருகிறார்...

ஹர்திக் பந்து வீச தயாராகி வருகிறார். அவர் இன்னும் பந்து வீசவில்லை. உலகக் கோப்பை தொடர் ஆரம்பமாகும் போது ஹர்திக் பந்து வீச தொடங்கிவிடுவார்” என தெரிவித்துள்ளார் ரோகித். காயத்திலிருந்து மீண்ட ஹர்திக் கடைசியாக ஜூலையில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பந்து வீசி இருந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து