முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவம்பர் 1-ம் தேதி முதல் ரயில்களில் முன்பதிவு செய்யாமல் பயணிக்கலாம்

செவ்வாய்க்கிழமை, 26 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : நவம்பர் 1-ம் தேதி முதல் ரயில்களில் மீண்டும் முன்பதிவின்றி பயணிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்மூலம், கொரோனா காரணமாக முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு நவம்பர் மாதம் 1-ம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகள் மீண்டும் இயக்கப்பட உள்ளது. 23 ரயில்களில் முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் பழைய முறைப்படி முன்பதிவின்றி பயணிக்கலாம்.

கோவை - நாகர்கோவில் , திருச்சி - திருவனந்தபுரம் இடையேயான ரயில்களிலும் முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகள் மீண்டும் இயக்கப்பட உள்ளன.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பால் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து