முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலை ரூ.105-ஐ கடந்தது

வியாழக்கிழமை, 28 அக்டோபர் 2021      வர்த்தகம்
Image Unavailable

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்று ரூ.105ஐ கடந்து விற்பனையானது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்படுகிறது.  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்  விலை உயர்வை சந்தித்துள்ளதால், இந்தியாவில் வரலாறு காணாத அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை நேற்று முன்தினம் லிட்டருக்கு 31 பைசா அதிகரித்து ரூ.104.83 ஆகவும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 33 பைசா உயர்ந்து ரூ.100.92 ஆகவும் விற்பனையானது.

 

இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் விலை நேற்று லிட்டர் ஒன்றுக்கு 30 பைசா அதிகரித்து ரூ.105.13க்கும் மற்றும் டீசல் விலை 33 பைசா உயர்ந்து ரூ.101.25க்கும் விற்பனையானது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து