முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

திங்கட்கிழமை, 1 நவம்பர் 2021      அரசியல்
Image Unavailable

Source: provided

மதுரை : மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் தென்மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் முல்லை பெரியாறு அணை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

இந்த ஆலோசனையில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து ஓ.பன்னீர் செல்வம் பேசினார். அப்போது பேசிய அவர்; முல்லை பெரியாறு அணை தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிகப் பெரிய ஆதாரமாக முல்லை பெரியாறு அணை உள்ளது.

அ.தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து 3 முறை 142 அடி வரை நீர் தேக்கப்பட்டது. முல்லை பெரியாறு நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியவர் ஜெயலலிதா. முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரள அரசு இடையூறு ஏற்படுத்துகிறது. முல்லை பெரியாறு விவகாரத்தில் சட்ட போராட்டம் நடத்தியது அ.தி.மு.க. முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. போராட்டம் நடைபெறும் இடம், நாள் குறித்து விரைவில்அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து