எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முல்லை பெரியாறு அணை பகுதிக்கு 14 முறை சென்று வந்திருக்கிறேன் என்று அமைச்சர் துரைமுருகனுக்கு ஓ.பி.எஸ். பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை வறுமாறு:
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டாத சூழ்நிலையில், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைத் தண்ணீர் சென்றடையாத நிலையில், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரள அமைச்சர்கள் முன்னிலையில் கேரளாவிற்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டியதன் அவசியம் என்ன என்பது குறித்தும், கேரள அரசு தன்னிச்சையாகவே திறந்துவிட்டதா அல்லது தமிழ்நாடு அரசின் இசைவுடன் திறந்துவிட்டதா என்பது குறித்தும், தன்னிச்சையாகத் திறந்துவிட்டது என்றால் தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரிகள் ஏன் கலந்து கொண்டார்கள் என்பது குறித்தும், தண்ணீர் திறந்துவிடுவதற்கு முன்பு ஐந்து மாவட்ட விவசாயிகளிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டதா என்பது குறித்தும் பதில் அளிக்குமாறு 30-10-2021அன்று அறிக்கை வாயிலாகக் கேட்டிருந்தேன்.
அதற்கு தெளிவான பதில் வராததையடுத்து, அதனைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் போராட்டம் அறிவித்த நிலையில், என்னுடைய கேள்விகளுக்குச் சரியான பதில் அளிக்காமல், கேரள அரசையும் கண்டிக்காமல், பெயருக்காக முல்லைப் பெரியாறு அணையைப் பார்வையிட்டுவிட்டு, நான் முல்லைப் பெரியாறு அணையைப் பார்வையிடவில்லை என்றும், போராட்டம் மட்டும் அ.தி.மு.க.வால் நடத்தப்படுகிறது என்றும் தெரிவித்து, அ.தி.மு.க.விற்கு அதைப் பற்றிப் பேச தார்மீக உரிமையில்லை என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்திருப்பது பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு விலை பத்துப் பைசா என்பதுபோல் உள்ளது.
முல்லைப் பெரியாறு அணையை நான் ஆய்வு செய்ததில்லை, பார்வையிடவில்லை என்று அமைச்சர் துரைமுருகனின் கூற்று முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. 2001 முதல் 2006 வரையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், 2002 முதல் 2006 வரை பொதுப் பணித்துறை அமைச்சர் என்ற முறையிலும், 2011 முதல் 2021 வரையிலான அ.தி.மு.க. ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையில் 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளிலும், 2011, 2012 மற்றும் 2015 முதல் 2021 வரை மாவட்ட அமைச்சர் என்ற முறையிலும் படகில் முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்குச் சென்று அங்கிருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்துவிடும் பாக்கியத்தைப் பெற்றதோடு பேபி அணை உட்பட அனைத்தையும் ஆய்வு செய்த அனுபவமும் எனக்கு உண்டு.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் 14 முறை நான் முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்குச் சென்று தண்ணீரைப் பாசனத்திற்காகத் திறந்துவிட்டு ஆய்வு செய்திருக்கிறேன். இந்த அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னி குயிக் வாழ்ந்த இடத்திற்கும் சென்று, இல்லத்தின் வடிவத்தை மாற்றாமல் பராமரிப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து அதன்பேரில் பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. கர்னல் ஜான் பென்னி குயிக்குக்கு தேனி மாவட்டத்திலே நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு, முன்னாள் முதல்வரால் 2013ஆம் ஆண்டு அவர் பிறந்த நாளான ஜனவரி 15ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது என்பதையும் இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
கர்னல் ஜான் பென்னி குயிக் பிறந்த தினத்தை பொங்கல் வைத்து அ.தி.மு.க.வினர் கொண்டாடிக் கொண்டு வருகின்றனர் என்பதையும் அமைச்சருக்கு இந்த நேரத்தில் நான் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். என்னுடைய வாழ்க்கையே முல்லைப் பெரியாறு அணையுடன் பின்னிப் பிணைந்த ஒன்றாகும். உண்மை நிலை இவ்வாறு இருக்க, நான் முல்லைப் பெரியாறு அணையைப் பார்வையிட்டதே இல்லை என்று அனுபவம் வாய்ந்த அமைச்சர் கூறுவது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதுபோல் உள்ளது.
முல்லைப் பெரியாறு பிரச்சனை மட்டுமல்ல, தமிழ்நாட்டின் எந்தப் பிரச்சினை குறித்தும், தமிழக மக்களின் எந்தப் பிரச்சினை குறித்தும் பேசுவதற்கு அ.தி.மு.க.விற்கு முழு தார்மீக உரிமை உண்டு என்பதை ஒருசில எடுத்துக்காட்டுகளுடன் விளக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் 2006ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்த நிலையில், அந்தத் தீர்ப்பினை அவமதிக்கும் வகையில் கேரள அரசு சட்டத்திருத்தம் கொண்டுவந்தபோது அந்தச் சட்டத் திருத்தம் செல்லத்தக்கதல்ல என உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்திலே 2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் வழக்குத் தொடுத்த அரசு ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு. இதற்கிடையில் தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் 2006ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டன. அந்தத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, "தமிழ்நாட்டில் நடைபெறும் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்தால், அண்டை மாநிலங்கள் உடனான நதிநீர்ப் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்” என்ற வாக்குறுதி தி.மு.க. கூட்டணியினரால் மக்கள் முன்வைக்கப்பட்டது.
ஆனால், தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைந்தும், அண்டை மாநிலங்களுடனான நதிநீர்ப் பிரச்சினையில் எந்தத் தீர்வும் காணப்படவில்லை. உண்மையிலேயே தி.மு.க.விற்கு அக்கறை இருந்திருக்குமானால், தி.மு.க.விற்கு அப்போது மத்திய அரசில் இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி இருக்கலாம். இதேபோன்று 2007ஆம் ஆண்டு வெளிவந்த காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட்டு இருக்கலாம். ஆனால், எதையுமே செய்யவில்லை. 'மனம் இருந்தால் மார்க்கம் உண்டு' என்று சொல்வார்களே அந்த மனம் தி.மு.க.விற்கு இல்லை.
அதே சமயத்தில், ஜெயலலிதா 2011ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர் காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மிகப் பெரிய சட்டப் போராட்டம் நடத்தி அதனை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தார்கள். இதேபோன்று, மிகப் பெரிய சட்டப் போராட்டம் நடத்தி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 வரை உயர்த்துவதற்கான உச்ச நீதிமன்றத் தீர்ப்பினைப் பெற்று அதனை நடைமுறைப்படுத்திக் காட்டியது ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு.
எனவே, முல்லைப் பெரியாறு அணை மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் எந்தப் பிரச்சினை குறித்தும் பேசக்கூடிய முழுத் தகுதி அ.தி.மு.க.விற்கு உண்டு என்பதை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனுக்கு அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தார்மீக உரிமை தி.மு.க.விற்கு இருக்கிறதா என்பதை தி.மு.க.வின் கடந்த கால நடவடிக்கைகளிலிருந்தே அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் புரிந்துகொள்வார்கள்.
இவ்வாறு ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.