முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக கடலோர பகுதிகளில் வரும் 11-ம் தேதி வரை பரவலாக கனமழை பெய்யும் : இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 7 நவம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : தமிழக கடலோரப் பகுதிகளில் வரும் 11-ம் தேதி வரை பரவலாக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது.  இந்த நிலையில் சென்னையில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு காலை 5 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ந்தது.  சென்னையில் அதிகப்பட்சமாக நுங்கம்பாக்கத்தில் 20 செ.மீ கனமழை பதிவாகி உள்ளது. எம்.ஆர்.சி. நகர், அண்ணா பல்கலைகழகம், வில்லிவாக்கம், பெரம்பூர், மீனம்பாக்கம், தரமணி, நந்தனம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ந்தது. சென்னை பல இடங்களில் 10 செ.மீக்கு மேல் மழை பதிவாகியுள்ளது. இதனால் நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கின.

இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

வடகிழக்கு பருவமழை காரணமாக ஆந்திரா மற்றும் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வரும்  9-11 வரை கனமழை எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து